Wednesday, 9 October 2013

நேற்றைய கனவு


நேற்றைய கனவு

வீதியில் ஒரு நாள்
பாரதி வந்தார்
குனிந்த தலையை-நிமிர
மறுத்தார்-ஜயா
என்றேன் பரிவுடன்-என்
கையிலிருந்த
கவிதைதுண்டை
கீழித்தே
போட்டார் -நடு
வீதியில்

அதிர்ந்தே போனேன்
ஆத்திரப்பட்டேன்
சிரித்துக் கொண்டே
சிந்திக்க சொன்னார்

நிமிடங்கள் தோறும்
மனங்களில் வேண்டும்
மகளிர் தினம்
மேடையில் வேண்டாம்
ம் ம்
மௌனித்தே போனேன்

பொய்மையை சொல்லி
பெண்மையை விற்கும்-ஒருசில
ஊடகம் பற்றி
செம்மையாய் நான்கு
செய்தியும் சொன்னார்

எதுகைக்கும்
மோனைக்குமாய்
கவி வடிக்கும்
பெண்ணியவாதி பற்றி
எதிர்த்தே நின்றார்-எம்மை
அழவைத்த நாட்களை
தொலைத்தே நின்றார்

மூடியில்ல
மனிதரை தேடினார்
மரணித்துக் கொண்டேன்

சத்தங்கள் ஓய்ந்தன
இரத்தங்கள் காய்ந்தன
ஈழப்பெண்களின் -வீரம்
இன்னும் இன்னும் ...............

பசியென்று கேட்கின்ற
பாலகனின் முகம் பார்த்து
அழுது வடிக்கின்ற
அன்னையவள் துயர்துடைக்க
எலும்பக்கூடாய் நொய்து -போன
தந்தையவர் பிணி தீர்க்க
சொந்த கரங்களை
தாங்கி நிற்கும்

ஈழ பெண்களின் தீரம் -சொல்லி
உரத்து கத்தினார்

சமூகச் சாக்கடைக்குள்
சாகடிக்க வைக்கும்
பேய்களிடம்........
மாட்டிக்கொண்டு
எதிர்நீச்சல் போடும்
இன்றைய பெண்கள்பற்றி
சற்று அதிகமாயே
ஆதங்கப்பட்டார்

சத்தியமாய் சொல்கின்றேன்
இவை அத்தனையும்

நேற்றைய கனவில்
பாரதி சொன்னது
விழித்துப் பார்த்தேன் -இன்னொரு
புது வாழ்தலுக்காய்
காலைச்சூரியனும்
சாட்சி சொல்லிற்று.............