Thursday, 4 July 2013

வலி தேடும் ஒளிகள் கவிதை





வலி தேடும் ஒளிகள்

எ(ம)னக்கானவனே

நியமாக உனை
தழுவ முடியவில்லை
எ(ம்) நிழலாக -நீ
விட்டுச் சென்ற நினைவுகள்
நெஞ்சக் கூண்டை
பலமாய் அழுத்துகின்றது

முன் சென்ற நாட்களில்-உனை
பாடிய தெருக்கள்
கூண்டிலிட்ட கிளியாகி
வாயடைத்து கிடக்கின்றது

வாழ்திய மலா்கள்-இப்போ
முதிர்ந்த கனவுடன்
உதிர்ந்து கிடக்கிறது -உனை
தாங்கிய ஊர்திகள்
எலும்புக் கூடாய்...

நீ-எம்முடன்
வாழ்ந்த வீட்டில்
நெருஞ்சி முட்கள்
புரையோடி அரவங்கள்
ஆழ்கிறது

உன் சவக்குழிகளை
மண்டியிட்ட கைகள்
மனதோடு அழுகிறது

கால்கள் தேடுகின்றன
உன் தடங்களை-நீயோ
நியாத்திற்கு உரமிட்டு
எங்கோ மறைந்து போகிறாய்

நட்சத்திரங்களில் பாடல்
இசைக்கின்றாய்
ஆழக் கடலில்
நடனமிடுகின்றாய்

ஈரக் காற்றுடன்
எனக்கு மட்டும் கேட்கும் -
உன் பாடலை
யாரிடமும் பகிர்ந்திட முடியாது
இதயக் குடுவையில்
அடைத்து கொள்கின்றேன்

என் உயிருக்கு இன்னும்
பிச்சை கேட்டுக்கொள்வதால்...........................

1 comment:

  1. இதயத்தை பிழிகிற சோகம் வார்த்தைகளில் வழிகிறது கவிதை சொல்கிற விடயம் கவிதையின் உயர்வான படிமங்களை இட்டு பெருமைகொள்ள முடியாமல் மனதை தடைசெய்கிறது.-----

    ReplyDelete