தூரத்துதெருநாய்கள்
செப்பணிடப்பட்ட
செம்மண் வீதியெங்கும் -தூரத்து
தெரு நாய்கள்
குட்டை வாலை மறைத்து -நீண்ட
சட்டை போட்டு
கறுப்பும் சிவப்புமாய்...........
நிறமற்றுப் போன
எம்மூா் தெருக்கள்-எல்லாம்
விசிறப்பட்டன
பொதியிடப்பட்டமாமிசங்கள்
சிவப்பருசி வடித்த கஞ்சியை
பார்த்து பார்த்து
பசிமறந்திட
வேலிக் கதிகாலின்
சீமைக் கிளுவையின்
ஒரு துளி நிழலில்
காவல் செய்தது
இன்னும் விடியவில்லை- என்று
இரகசியமாய் கூவிற்று
இறக்கை பிடுங்கப்பட்ட குயில் பேடு -ஒன்று
எம் மௌனங்களை
உடைக்க சொல்கிறாய் அது
உனக்காக உடைவதாய் இல்லை -என
மண்பிரன்டி
துடிப்படங்கிப் போனது
ஊர்மனை நாய்கள்
தெருநாய்கள் அலட்டிக் கொண்டது
இது தான் தம் வீரமென்று.............................
செப்பணிடப்பட்ட
செம்மண் வீதியெங்கும் -தூரத்து
தெரு நாய்கள்
குட்டை வாலை மறைத்து -நீண்ட
சட்டை போட்டு
கறுப்பும் சிவப்புமாய்...........
நிறமற்றுப் போன
எம்மூா் தெருக்கள்-எல்லாம்
விசிறப்பட்டன
பொதியிடப்பட்டமாமிசங்கள்
சிவப்பருசி வடித்த கஞ்சியை
பார்த்து பார்த்து
பசிமறந்திட
வேலிக் கதிகாலின்
சீமைக் கிளுவையின்
ஒரு துளி நிழலில்
காவல் செய்தது
இன்னும் விடியவில்லை- என்று
இரகசியமாய் கூவிற்று
இறக்கை பிடுங்கப்பட்ட குயில் பேடு -ஒன்று
எம் மௌனங்களை
உடைக்க சொல்கிறாய் அது
உனக்காக உடைவதாய் இல்லை -என
மண்பிரன்டி
துடிப்படங்கிப் போனது
ஊர்மனை நாய்கள்
தெருநாய்கள் அலட்டிக் கொண்டது
இது தான் தம் வீரமென்று.............................





