Sunday, 30 June 2013

தூரத்துத் தெருநாய்கள் கவிதை

தூரத்துதெருநாய்கள்

செப்பணிடப்பட்ட 
செம்மண் வீதியெங்கும் -தூரத்து
தெரு நாய்கள் 

குட்டை வாலை மறைத்து -நீண்ட
சட்டை போட்டு
கறுப்பும் சிவப்புமாய்...........

நிறமற்றுப் போன
எம்மூா் தெருக்கள்-எல்லாம்
விசிறப்பட்டன
பொதியிடப்பட்டமாமிசங்கள்


சிவப்பருசி வடித்த கஞ்சியை
பார்த்து பார்த்து
பசிமறந்திட
வேலிக் கதிகாலின்
சீமைக் கிளுவையின்
ஒரு துளி நிழலில்
காவல் செய்தது

இன்னும் விடியவில்லை- என்று
இரகசியமாய் கூவிற்று
இறக்கை பிடுங்கப்பட்ட குயில் பேடு -ஒன்று

எம் மௌனங்களை
உடைக்க சொல்கிறாய் அது
உனக்காக உடைவதாய் இல்லை -என
மண்பிரன்டி
துடிப்படங்கிப் போனது
ஊர்மனை நாய்கள்

தெருநாய்கள் அலட்டிக் கொண்டது


இது தான் தம் வீரமென்று.............................

Sunday, 23 June 2013

நினைவுத் தூறல்..


குட்டிச் செல்வங்களே-உம்
நினைவு வலிக்கிறது
அள்ளி அணைத்து-முத்தமிட
என் நெஞ்சு துடிக்கிறது

உலா வரும் நிலாவினை
உவகையுடன் காட்டி
குலாவியே உணவை தந்து
குதுகலிக்க நான் -இல்லை
நீள்தொலைவில்
வெண்பனிப் போர்வையுடன்..........

.எங்கோ ஒா் மூலையில்
தூக்கணங் குருவிக்கூட்டின்
தும்புகளில் நான்..............

பாதியிரவில் உம்
தூக்கத்தை குழப்பி
பார்த்து விட்டு
அவசரமாய் ஓடுகின்றேன்
மிகுதி வேலைக்காய்.....

பிஞ்சுப் பிரபஞ்சங்களாய்-தினம்
என்னையே சுற்றிவரும்
அன்புக்குழந்தைகளே-உங்களை
ஆரத்தழுவுகின்றேன்

காலத்தடுமாற்றம் நாம்
வாழ்ந்த நிலை என்ன
வாழும் நிலை என்ன
வலிக்கிறது உள்ளம்

ஆசைச் செல்வங்களே
ஆழ வேண்டாம்
பாச நெஞ்சத்துடன்
பாக்குவமாய் இருங்கள்

நாளை நாம்
ஒன்றாவோம்
மலரின் மலர்ச்சிக்காய்
புன்னகைப்போம்..............மிதயா  கானவி...

இறந்துபோனநாளொன்று............


படித்ததில்பிடித்த-உன்

வரிகள்உன்னைப்
படித்தபின்
அடங்கி போயிற்று
இராப்பறவையின்
அவலக்குரலாய்

எனை
இனம்காணத்தவறிய
உன்விழிகள்
எமக்கான
உறவின்விரிசல்களை
மௌனங்களாக்கின

வெற்றுவார்த்தைகளின்
சத்தமற்றஒலிகள்
சலசலக்கும்ஓடைகளின்
ஓரங்களில்
செத்தபாசிச்செடிகளாய்
நாறும்கழிவுகளாய்
இறந்தநாளொன்றின்
முடிவில்கரையொதுங்குகின

உனைதொலைத்து
விட
திராணியற்று
என்னுள்கரைகிறது
நீண்டுதொங்கும்
இரவுகளின்வெம்மை
நெஞ்சுமையத்தில்
வெறுமையாய்............

தேய்ந்துகொண்டிருந்த
நினைவுகளை
தூசுதட்டி
மீளவும்
துடைத்துப்பார்க்கின்றேன்
நீயில்லாமல்போன
என்னைபோலவே
அதுவும்.........

நிகழ்தகவுகளே
நிகழ்வுகள்ஆனதால்
உண்மைகளைநியாயப்படுத்த
முடியாதவளாகி-உன்
பார்வைகளைதற்செயலாக்கி
நகரும்நாட்கள்
சொல்லிசெல்லும்
இறந்துபோன
நாளொன்றின்இயலாமைகளை...

...........மிதயா  கானவி....................

எமக்காக ஒரு விடியல் வரும்...

என் இரவை நிறைக்கிறது
உன் கனவுகள்
என்னை சுற்றி காற்றில் அலைகிறது
உன் காதலின் செய்தி
உன் பாடலின் இசையாய் வழிகிறேன்
உன் சொற்களில் என்னை நிரப்பியிருக்கிறாய்
அந்த அன்பின் வார்த்தைகள்
என்னை அள்ளிப்போகிறது
ஆயினும் அன்பே............................

தனிமை கொடியது
என்னையும் உன்னையும்
நம் வாழ்வையும்
சுட்டெரித்து விடும்

ஒரு விடியலில்
நான் உன்னிடம்
வருவேன்

காரிருளில் உன்
மடி மீது முகம்புதைக்க
கவலை மறந்து
உன் மார்வில்
சாய்ந்து கொள்ள
யாரும் கண்டறியா
உன் அன்பில் இணைந்திட
நான் வருவேன்
உன்னிடம்


---------- மிதாயா கானவி

Saturday, 22 June 2013

கவிதை

இலக்கியத்  தோழன்...
.....................................


எனக்கொரு இலக்கிய
தோழன்
அவன் எழுத்தைப்
போலவே அவனிலும்
எழிமையே.............

அலகாரமில்ல அவன்
வதனம் போலவே
அகமும் அப்பிக்
கிடந்தது எப்போதும்

சின்னஞ் சிறிய
இருபபிடத்தில்
சிதறியே கிடந்த அவன்
பாவனைப் பொருட்கள்
சொல்லி நின்றன
அவன் தனிமையின்
வருடல்களை

வாழ்வை திண்டுகொண்டிருந்த
துயரில்லிருந்து மீண்டுகொண்டிருந்தான்
மெதுவாக.................

வெறித்த அவன் விழிப்பார்வை
பரந்து கிடந்த கடலலையில்
மோதி பிரகாசமாய்
ஒளிர்ந்து கொண்டேயிருந்தது..

கவிதை

இலக்கியத்  தோழன்...
.....................................


எனக்கொரு இலக்கிய
தோழன்
அவன் எழுத்தைப்
போலவே அவனிலும்
எழிமையே.............

அலகாரமில்ல அவன்
வதனம் போலவே
அகமும் அப்பிக்
கிடந்தது எப்போதும்

சின்னஞ் சிறிய
இருபபிடத்தில்
சிதறியே கிடந்த அவன்
பாவனைப் பொருட்கள்
சொல்லி நின்றன
அவன் தனிமையின்
வருடல்களை

வாழ்வை திண்டுகொண்டிருந்த
துயரில்லிருந்து மீண்டுகொண்டிருந்தான்
மெதுவாக.................

வெறித்த அவன் விழிப்பார்வை
பரந்து கிடந்த கடலலையில்
மோதி பிரகாசமாய்
ஒளிர்ந்து கொண்டேயிருந்தது..

கவிதை

இலக்கியத்  தோழன்...
.....................................


எனக்கொரு இலக்கிய
தோழன்
அவன் எழுத்தைப்
போலவே அவனிலும்
எழிமையே.............

அலகாரமில்ல அவன்
வதனம் போலவே
அகமும் அப்பிக்
கிடந்தது எப்போதும்

சின்னஞ் சிறிய
இருபபிடத்தில்
சிதறியே கிடந்த அவன்
பாவனைப் பொருட்கள்
சொல்லி நின்றன
அவன் தனிமையின்
வருடல்களை

வாழ்வை திண்டுகொண்டிருந்த
துயரில்லிருந்து மீண்டுகொண்டிருந்தான்
மெதுவாக.................

வெறித்த அவன் விழிப்பார்வை
பரந்து கிடந்த கடலலையில்
மோதி பிரகாசமாய்
ஒளிர்ந்து கொண்டேயிருந்தது..

Tuesday, 11 June 2013

கானவியின் கருணை நதி.....
..............................................

காகித மூலை மடித்து கதையை காத்திருக்க வைக்காமல்
இருந்த இருப்பில் அருகில் நடப்பது ஏதும் அறியாமல்
படித்து முடித்தேன் கானவியின் கருணை நதி.

கதை படித்தாயிற்று நெஞ்சில் கனம் அதிகமாயிற்று
எம் மக்கள் பட்ட அவலங்கள், எம்மவரின் அர்ப்பணிப்புக்கள்,
வேண்டிய தெய்வங்கள் மக்களைக் கைவிட்ட போதும்
இயன்றவரை உயிர்களை காப்பாற்றிய இறைவனுக்கும்
மேலான மருத்துவ பணியாளர்களின் கருணைப்பணி நிறைந்
தோடுவதோடு புனிதக் காதல் ஒன்றின் தேடலும் தாகமும்
கலந்தோடி கடல் சேர்கின்றது கருணை நதி

இளம் எழுத்தாளரின் இரண்டாவது நுால் என்பதனாலோ
என்னவோ நதியின் வளைவுகள் குறைந்திருந்தாலும்
மனதில் பலதை பயிரிட்டு சென்றுள்ளது. உண்மையில்
கானவி சிறந்த சிந்தனை உள்ள துணிந்த பெண்.

இறுதிக்கட்ட போரில் எஞ்சிய எம் மக்கள் ஒவ்வொருவரின்
மனங்களிலும் அழியாப் பதிவாய் இருக்கும் துயர் நிறைந்த
அவலங்களை எளிய நடையில் புரிய வைத்திருக்கிறார்
கானவி. நானும் அவ்விடம் தான் ஆனாலும் இறுதிக்கட்ட
போரின் சூழலில் அங்கு வாழவில்லை.
அன்று அங்கு நடந்த கோர சம்பவங்களை ஊடகங்கள்
மூலமாக அல்ல எம் உறவுகளிடம் கேட்டு கேட்டு
துயர் பகிர்ந்த எனக்கு கானவி சொல்லும் கருணை
நதி மேலும் நெஞ்சை உறைய வைத்திருக்கிறது.

ஒவ்வொரு தமிழனும் நிச்சயமாக படிக்க வேண்டிய
நாவல் " கருணை நதி". கானவியின் இந்த இலக்கிய
பயணம் தொடர மேன்மேலும் வளர என் உளம் கனிந்த
வாழ்த்துக்கள்....
நன்றி

அன்புடன்...
திசா.ஞானசந்திரன்

Monday, 10 June 2013

பிணக்காட்டின் இறுதி நாள்
...............................................

வானம் கந்தக புகைகளால்
வன்புணரப்பட்டு புவியெங்கும்
தீட்டுக்களால் வழிந்து கொண்டிருந்த
விடிகாலைப் பொழுதொன்று
சாவின் முனகலையும் இழந்து
சத்தங்களை குறைத்து
சவமாய்க் கிடந்தது

சடங்குள் சம்பிரதாயங்கள்
அந்தரங்கங்கள் பிடிமானங்கள்
துணிச்சல்கள் எதுவுமற்று
மௌனமாகி முன்செல்லும்
பிசாசுகளின் பின்னால்
நடக்கத் தொடங்கினோம்

குழந்தைகளையும்
முட்களையும் ஒன்றாக்கி
வரிசைப்படுத்தியது
பிசாசுக் குட்டிகள்

ஈனக்குரல் எடுத்து
கதறும் ஓசை காற்றில்
ஏறித் தேவதைகளின்
வாசல் வரை சென்றது...

வான் இறங்கி வரவே இல்லை
எந்த தேவதைகளும்...

எம் தெருக்களில்
கற்களும் முட்களும்
அடங்கிப்போக
பிணங்களும்
சதைத்துண்டங்களும்
இடையுறாகியது கால்
வழியில்..

பெரும் வெடி ஓசை
அடங்கி சன்னங்கள்
மட்டும் சடசடக்க
வீதி வீதியாய்
முனங்கல்கள் கேட்டன

முல்லை--வாய்க்காலில்
நிறைந்த குருதியும்
வட்டு வாகலில் மிதந்த
பிணங்களும்..........................

ஒருதுளி தண்ணீருக்காய்
வெம்பிய உயிர்கள்
தேடுவார் அற்று
உருக்குலைந்து போனது

இத்தனை காலம்
ஓடிமறைந்தாலும்
வற்றாது நெஞ்சில்
நஞ்சாய் எரிகிறது

உயிருக்காய்
ஊசலாடிக் கொண்டிருந்த
அன்றைய நாளை
பிசாசுக்களின் வாரிசுக்கள்
சாத்தான்னளின் திருமண
நாளாக்கி இரத்த விருந்து
உபசரித்துக் கொண்டது..

.
மிதயா.கானவி)