கானவியின் கருணை நதி.....
.......................... ....................
காகித மூலை மடித்து கதையை காத்திருக்க வைக்காமல்
இருந்த இருப்பில் அருகில் நடப்பது ஏதும் அறியாமல்
படித்து முடித்தேன் கானவியின் கருணை நதி.
கதை படித்தாயிற்று நெஞ்சில் கனம் அதிகமாயிற்று
எம் மக்கள் பட்ட அவலங்கள், எம்மவரின் அர்ப்பணிப்புக்கள்,
வேண்டிய தெய்வங்கள் மக்களைக் கைவிட்ட போதும்
இயன்றவரை உயிர்களை காப்பாற்றிய இறைவனுக்கும்
மேலான மருத்துவ பணியாளர்களின் கருணைப்பணி நிறைந்
தோடுவதோடு புனிதக் காதல் ஒன்றின் தேடலும் தாகமும்
கலந்தோடி கடல் சேர்கின்றது கருணை நதி
இளம் எழுத்தாளரின் இரண்டாவது நுால் என்பதனாலோ
என்னவோ நதியின் வளைவுகள் குறைந்திருந்தாலும்
மனதில் பலதை பயிரிட்டு சென்றுள்ளது. உண்மையில்
கானவி சிறந்த சிந்தனை உள்ள துணிந்த பெண்.
இறுதிக்கட்ட போரில் எஞ்சிய எம் மக்கள் ஒவ்வொருவரின்
மனங்களிலும் அழியாப் பதிவாய் இருக்கும் துயர் நிறைந்த
அவலங்களை எளிய நடையில் புரிய வைத்திருக்கிறார்
கானவி. நானும் அவ்விடம் தான் ஆனாலும் இறுதிக்கட்ட
போரின் சூழலில் அங்கு வாழவில்லை.
அன்று அங்கு நடந்த கோர சம்பவங்களை ஊடகங்கள்
மூலமாக அல்ல எம் உறவுகளிடம் கேட்டு கேட்டு
துயர் பகிர்ந்த எனக்கு கானவி சொல்லும் கருணை
நதி மேலும் நெஞ்சை உறைய வைத்திருக்கிறது.
ஒவ்வொரு தமிழனும் நிச்சயமாக படிக்க வேண்டிய
நாவல் " கருணை நதி". கானவியின் இந்த இலக்கிய
பயணம் தொடர மேன்மேலும் வளர என் உளம் கனிந்த
வாழ்த்துக்கள்....
நன்றி
அன்புடன்...
திசா.ஞானசந்திரன்
..........................
காகித மூலை மடித்து கதையை காத்திருக்க வைக்காமல்
இருந்த இருப்பில் அருகில் நடப்பது ஏதும் அறியாமல்
படித்து முடித்தேன் கானவியின் கருணை நதி.
கதை படித்தாயிற்று நெஞ்சில் கனம் அதிகமாயிற்று
எம் மக்கள் பட்ட அவலங்கள், எம்மவரின் அர்ப்பணிப்புக்கள்,
வேண்டிய தெய்வங்கள் மக்களைக் கைவிட்ட போதும்
இயன்றவரை உயிர்களை காப்பாற்றிய இறைவனுக்கும்
மேலான மருத்துவ பணியாளர்களின் கருணைப்பணி நிறைந்
தோடுவதோடு புனிதக் காதல் ஒன்றின் தேடலும் தாகமும்
கலந்தோடி கடல் சேர்கின்றது கருணை நதி
இளம் எழுத்தாளரின் இரண்டாவது நுால் என்பதனாலோ
என்னவோ நதியின் வளைவுகள் குறைந்திருந்தாலும்
மனதில் பலதை பயிரிட்டு சென்றுள்ளது. உண்மையில்
கானவி சிறந்த சிந்தனை உள்ள துணிந்த பெண்.
இறுதிக்கட்ட போரில் எஞ்சிய எம் மக்கள் ஒவ்வொருவரின்
மனங்களிலும் அழியாப் பதிவாய் இருக்கும் துயர் நிறைந்த
அவலங்களை எளிய நடையில் புரிய வைத்திருக்கிறார்
கானவி. நானும் அவ்விடம் தான் ஆனாலும் இறுதிக்கட்ட
போரின் சூழலில் அங்கு வாழவில்லை.
அன்று அங்கு நடந்த கோர சம்பவங்களை ஊடகங்கள்
மூலமாக அல்ல எம் உறவுகளிடம் கேட்டு கேட்டு
துயர் பகிர்ந்த எனக்கு கானவி சொல்லும் கருணை
நதி மேலும் நெஞ்சை உறைய வைத்திருக்கிறது.
ஒவ்வொரு தமிழனும் நிச்சயமாக படிக்க வேண்டிய
நாவல் " கருணை நதி". கானவியின் இந்த இலக்கிய
பயணம் தொடர மேன்மேலும் வளர என் உளம் கனிந்த
வாழ்த்துக்கள்....
நன்றி
அன்புடன்...
திசா.ஞானசந்திரன்

No comments:
Post a Comment