Tuesday, 29 January 2013

மெழுகிமுடிந்த வர்ணங்கள்.........கவிதை


வெறும்
வர்ணங்களால்
வடுக்கள் மறைந்து
போவதில்லை

...
காயப்பட்ட
சொந்தமெல்லாம்
கதறி கதறி வந்த

நாட்களில்
நானும்
காயத்துடன் கிடந்தேன்
வயிறு பிழந்து
வலிகளுடன;
...................................
அனாதரவானர்கள்
வீதிகளில்....

இன்று
வர்ணங்களால்
மறைக்கப்பட்ட
என் சுவர்களின்
வெடிப்புக்களிலிருந்து

என் ஆத்மா
அழுகிறது
நான் எல்லாம் ஓர்
வைத்தியசாலையா?
என



என்னால் கைவிடப்பட்டு
இறந்து போன உயிர்களின்
மனச்சாட்சிகுள்
இறந்து கொண்டிருக்கறேன்
.தினமும்See

.

3 comments:

  1. ////இன்று
    வர்ணங்களால்
    மறைக்கப்பட்ட
    என் சுவர்களின்
    வெடிப்புக்களிலிருந்து//// வலி மிகுந்த வரிகள்...பாவம் அவையென்ன செய்யும்...
    காலங்களும் சூழ்நிலைகளும் வர்ணம் பூசிவிடுகின்றன..ஆனால் உள்ளே சீழ்பிடித்துப் போய் வலிக்கிறது.. மறைத்துக் கொண்டு சிரிக்கிறது இன்னும் ஈழத்தமிழினம்...

    ReplyDelete
  2. உள்ளே சீழ்பிடித்துப் போய் வலிக்கிறது.. மறைத்துக் கொண்டு சிரிக்கிறது இன்னும் ஒ உண்மை கருத்திடலுக்கு நன்றி தோழி............................

    ReplyDelete
  3. என்னால் கைவிடப்பட்டு
    இறந்து போன உயிர்களின்
    மனச்சாட்சிகுள்
    இறந்து கொண்டிருக்கிறேன்
    .தினமும்See ஆச்சரியபட வைக்கிற கவிதை மனம் தெரியும் கவிதை இன்னும் சொல்ல தயங்குகிற அரசியல் யதாரத்தமொன்றை சொல்லியிருக்கிறீர்கள். துணிச்சலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    ReplyDelete