Wednesday, 16 January 2013

சூரிய பெண்னே!

சூரிய பெண்னே!
உஜ்

மெதுவாகய் மெதுவாய்- உன்
கூரிய கதிர்களை விதைத்திடு
போரின் பற்களால் 
கடித்து குதறப்பட்ட
எம் தேசத்தில்
குழந்தைகள் கூட
பாதணியற்று நடக்கின்றார்கள்

தைத்திரு நாளே
மன்னித்து விடு
புதுப்பானையெடுத்து
பொங்கலிட முடியல்ல-
இன்னும் நானொ் அகதி

சூரிய உதயம் கானாத
காலைப் பொழுதொன்றில்
ஊா் இழந்தோம்
நாடு மீண்டதாம் -இன்று
நாம்மட்டும் மீளவில்லை

பற்றை மேவிய- எம்
வெற்று நிலம் போல்-எம்
கைகளும் வெறுமையே -இருந்தும்
படையல் செய்கிறோம் -

எப்போதும் வரற்றாத- எம்
கண்ணீரைப்போல
நம்பிகையின் காத்திருப்புக்கள் - எம்மில்
வழிந்துகொண்டிருப்பதால்

No comments:

Post a Comment