Saturday, 27 July 2013


உடைக்கப்பட்டது 
சமாதிகளே..
சரித்திரங்கள்
இல்லை

Saturday, 13 July 2013

என் தேசத்தை பற்றி................

என்னடி தோழி
எப்படி சுகம்?


சிட்டுக் குருவி
இசை மறந்த எம்
தேசத்தைப்பற்றி
என்னத்தை சொல்ல -நான்

துருப்பிடித்த துப்பாக்கிகள்
எல்லைதாண்டியே வருவதால்
சத்தமின்றி கொல்லும்
சுவாச நோய் பற்றி.......

வாகை மரங்கள்
உதிரும் கண்ணீரில்
அரசமரங்கள்
உயீர்ப்பித்தல்
பற்றி-எப்படி
சொல்ல நான்

வற்றிப் போகாத
வரட்டுப் பிடியில்
ஒற்றை கால்
நிற்கும் கொக்கை-பார்த்து
வெக்கி போகும்
தூரோகத்தை பற்றி
எப்படி சொல்லுவேன்

செம் பருந்தை புணரத்தூரத்தும்
காணங்கோழிகளின்
நப்பாசை பற்றி
யாரிடம் சொல்லுவேன்

ஆறிடா ரணங்களில்
ஆழ்மனதில் பதிந்திட்ட
அவலங்கள் -ஈரம்
காயாமல் இன்னும்
பிசு பிசுக்கும்

புயலடித்த தேசத்தில்
சிதறுண்டு போன
பறவைக் கூட்டங்களின்
இருப்புகள் பற்றி



உயிர்களை நிலைநிறுத்த
உண்மைகளை உரு மறைக்கும்
என் பேனாவை வைத்து
எப்படி சொல்லுவேன்
என் தேசத்தைப்பற்றி.................
 — 

Saturday, 6 July 2013

தனிமை வரைந்த மடல்......................3

என் இனியவனே 
மனமிணைந்திருக்கிறோம் .ஆனால் காலம் நம்மிடையே பிரிவெழுதி இருக்கிறது கவலைப்படாதே என்மனம் சொல்கிறது உனது துயர் விரவில் விலகும் உனது வேதனையை நானும் எனது துயரை நீயம் புரிகிறோம் .அனால் ஒருவர்கொருவர் மறைக்கிறோம் ஆனால்அன்பு அதை வெளியே கொண்டு வந்து விடுகிறது நேற்று உன்னுடன் பேசும்போ
து எனக்குஅழுகைகட்டுபடுத்த முடியவில்லை அதனால்தொடரமுடியாமல்நிறுத்தினேன்
 நான் நம்பிக்கையுன் இருக்கிறேன் உனக்குவிரைவில் குணமாகும் விரைவில் நாம் சந்திப்போம்
அன்பானவனே
 எனக்கும் என்னமோ மனசுக்குள் ஏக்கம் தயக்கம் தாக்கம் யாரிடமும் பெற முடியா அறுதல் உன்னிடம் கிடைப்பதாக நம்புகின்றேன்
விடியலும் வெளிப்புமாகிய எம் அன்பால் நம் காயங்களிற்கு மருந்திட தவிக்கின்றோம் உன்னை நான் புரிநது கொள்வதைப்போலவே என்னை நீயும் புரிகின்றாய் உன் சொற்கள் என்னை ஆறுதல் படுத்துகிறது உன்நோய் எனை சித்திரவதை செய்கிறது

 உ்னை பார்க்கனும் போல ஏதோ வெறுனமவிரிப்புகளை தொலைத்து உன்னுடன இருக்கனும் போல .......கிடைக்கும் நேரத்தில் எல்லரம் இனி பிரிவே வேண்டாம் என பிராத்தனை செய்கின்றேன் இரக்கமில்லாத காலம் .அதை இன்னும் தரவில்லை

Thursday, 4 July 2013

வலி தேடும் ஒளிகள் கவிதை





வலி தேடும் ஒளிகள்

எ(ம)னக்கானவனே

நியமாக உனை
தழுவ முடியவில்லை
எ(ம்) நிழலாக -நீ
விட்டுச் சென்ற நினைவுகள்
நெஞ்சக் கூண்டை
பலமாய் அழுத்துகின்றது

முன் சென்ற நாட்களில்-உனை
பாடிய தெருக்கள்
கூண்டிலிட்ட கிளியாகி
வாயடைத்து கிடக்கின்றது

வாழ்திய மலா்கள்-இப்போ
முதிர்ந்த கனவுடன்
உதிர்ந்து கிடக்கிறது -உனை
தாங்கிய ஊர்திகள்
எலும்புக் கூடாய்...

நீ-எம்முடன்
வாழ்ந்த வீட்டில்
நெருஞ்சி முட்கள்
புரையோடி அரவங்கள்
ஆழ்கிறது

உன் சவக்குழிகளை
மண்டியிட்ட கைகள்
மனதோடு அழுகிறது

கால்கள் தேடுகின்றன
உன் தடங்களை-நீயோ
நியாத்திற்கு உரமிட்டு
எங்கோ மறைந்து போகிறாய்

நட்சத்திரங்களில் பாடல்
இசைக்கின்றாய்
ஆழக் கடலில்
நடனமிடுகின்றாய்

ஈரக் காற்றுடன்
எனக்கு மட்டும் கேட்கும் -
உன் பாடலை
யாரிடமும் பகிர்ந்திட முடியாது
இதயக் குடுவையில்
அடைத்து கொள்கின்றேன்

என் உயிருக்கு இன்னும்
பிச்சை கேட்டுக்கொள்வதால்...........................