Wednesday, 6 March 2013

கனவுகளின் காலபோகம்.............கவிதை


காலபோகக் கனவுகளின்
வெகுமதியை -மழை
பறித்துச் சென்று
நீண்ட நேரமாகியிருந்தது.
கனவுகளை திண்ட
ஏமாப்பில்-
கோழிவிழுங்கிய
கருநாகம் போல்
அசைவற்று கிடந்தது
வானம்

ஊர்ப் பெண்டுகளின்
மாரடிர்பை போல் 
விசிறியடித்தது
காற்று

தலைப்பிரசவத்திற்காய்
காத்திருந்த
நாள்லொன்றில்
தாய்மடி தொடாது
இறந்து போன
குழநதையின் தாய்போல
அலங்கோலமாய்
கிடந்தது
வயல்
ஆறுதல் தரமுடியா
 துனைவனாய்
தேம்பியயேயழுதது.....நிலம்


வீட்டின் கூரையில்
எங்கோ ஓர் மூலையில்
தொங்கும் ஒட்டறைபோல்
காத்து கிடக்கிறது
ஏழைவிவசாயின்
காலபோகக்
கனவுகள்

Friday, 1 March 2013

இதயத்யதுடிப்பு................கவிதை


தேனீர் கோப்பைகள்
வெறுமையாகியும்
சற்றும் பிசுபிசுப்பின்றி
வரண்டு கிடந்தது
தொண்டை

மீள்குடியேற்றப்படாத
என் சிறுதேசம் போல
சிதைந்த உணர்வுகளை
வலிந்திழுத்து ஒன்று சேர்த்து
அவள் இதயத்துடிப்பை
மீண்டும்
பரிசோதிக்க எத்தனித்தேன்
தோற்றுக் கொண்டது
என் பட்டப்படிப்புகள்
 ரெலஸ்கோப்பினுள்
வலி வலியென துடித்துகொண்டது
அவள் இதயம்

குழம்பிய குட்டையாய்
தளம்பிய உணர்வுடன்
நீண்ட பெருமூச்சொன்று

நிமிர்ந்து பார்த்தேன்
மலா்ந்து உதிர்ந்த
மார்பவங்கள்
சட்டை கிழிசலால்
எட்டிப்பார்க்க
வெற்றிலை சப்பல்
கொடுக்கினுள் தடம்புரள
பொக்கை வாய்நிறைய
புன்னகையை
சமைத்துக்கொண்டிருந்தாள்
;நம்பிக்கையுடன்
பகலோனின் கீற்றுக்கள்
தகரக்கொடடில்களின்
கொடுரத்தை சப்பிதுப்பிவிட
தூரத்து
வேப்பமரக்காக்கா
உதிரும் சருகுகளில்
வெட்பம் தணித்து
இடைவிடாது கத்தியது