Thursday, 22 August 2013


கறுப்பும் சிவப்புமாய...........................
அன்றை நாளில் எல்லோரையும் போல் அவனும் ஒரு-போராளி நோயாளி-எனக்கு..!
மென்மையும் குறும்பும் அவனது கண்களின் கொடை! வீரமும் துணிவும் அவன் இலட்சியப்பாதை!
தமிழும்-தன் நாடும்-அவன் உயிரின் மூச்சு!
ஊா் தூங்கிப் போன- ஒர் நாளில் குருதி குடித்திருந்த கட்டுதுணியுடன்-எம் மருத்துவ மனை நுழைந்தான்.........!!!
கூடவே என் தோழனுமானான!்
ஈராறு தடவைகள் வீரப்புண்கள் சுமந்தும் மீள உயிர்வாங்கி மீண்டவன் அவன்..!
சுடலைக் குருவியும் துக்குறிகளும்-அவன் துணிவு கண்டு அஞ்சிப் போனது!
வௌவால்களும் ஆந்தைகளும் அலறத்தொடங்கிய பொழுதொன்றை -மேவிய சன்னங்களும் இடப்பெயர்வுகளும்
தூங்கவிடாது எழுப்பியது அவனை..!
விழுப்புண்ணின் வேதனையை நெஞ்சு மையத்தில் ஒழித்தெழுந்து
பச்சை புண் காயும்-முன்பே சத்தமின்றி ஒற்றை செருப்பை தேடிப் பிடித்தான!்
விடிந்தும் விடியாத காலைக் குளிரில் விடை பெறுதலுடன் நடக்க தொடங்கினான்..!
பின்னொரு நாளில் சத்திர சிகிச்சை அறையில் - நுழைந்தது -அவன் இல்லாத செய்தி மட்டும!்
இப்பொழுது எனைத் தேடி வந்த கடிதத்தில் எழுதியிருந்தது "நான் அவனது அண்ணா அவனைப் போலவே நானும்" கறுப்பும் சிவப்புமாய்...!!
-மிதாயா கானவி் <இது அன்பரசனுக்கு சமர்ப்பணம்

Saturday, 10 August 2013

சறக் சறக்கென சத்தம் எழ
புழுதி பறந்தது

அப்புறமும் இப்புறமும்
புரண்டு புரண்டு
மண்னைக் கோலி-வரப்பாக்கியது
மண்வெட்டி

தோட்டது மண் சுட்டது
வெயில் கொழுத்தியது
குரல் கம்மியது
பசி வயிற்றை
துளை போட்டது

அவளுக்கு எதுவும்
உறைக்கவில்லை

நேற்று படித்த
பத்திரிகை செய்தியை விட

வயிற்று பசிபோக்க
விதவைப் பெண்கள்
விபச்சாரத்தொழிலி