Tuesday, 25 February 2014

கருணை நதி பாகம் -7


பார்த்தீபன் என்ற பெயரைக்கேட்டதும் திவாவிற்கு அவளையே கண்டு கதைப்பதாகப் புத்துணர்வு கிளம்பிவிட்டது.'சொல்லடா மச்சான்'
'திவா நீ சொன்ன ஆளை கண்டு கதைச்சன். சுதாகர் சங்கவி. ஆள் இப்ப ஆனந்தகுமாரசாமி முகாம். எஸ் வலயம்.கொட்டில் இலக்கம் 66இன் கீழ் 2.'
'பார்த்தி டேய், அவ்வளவுந்தானா தெரியும்?'
'வேற என்ன தெரியணும்?'
'அவளேன் கொஸ்பிட்ரலுக்கு வந்தாள்?'
என்று தயங்கினான்.
'அவளுக்கேதும் பெரிய வருத்தமோ?'சிரித்தான் பார்த்தீபன்.'அப்பிடிஒண்டுமில்லடா. குருதி பரிசோதிக்கப் போனவள். முடிவு தெரியல்ல. நான் கதைக்க முயற்சித்தன். அவள் கதைக்க விரும்பேல்ல. திவா இனியாவதுஅவள்யாரெண்டுஎனக்குசொல்லனடா.''சும்மா.....பழக்கம்.அவளவுதான்டா மச்சான்''அப்பிடித் தெரியேல்ல எனக்கு. பரவாயில்ல. மலிஞ்சால் சந்தைக்கு வருந்தானே. அப்ப பாக்கிறன்' என்றான் நண்பன்.

                                    திவாவிற்கு புதிய உலகத்தில் பறப்பதைப்போல இருந்தது. பார்த்தீபனுக்கு நன்றிகூடச் சொல்லாமல் தொலைபேசியை வைத்துவிட்டான். திரும்பவும் பார்த்தீபனே எடுத்து சீண்டியபோதுதான் திவா தன் நினைவுக்கு வந்தான்.'பார்த்தீபன் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான்?' என்பதை நினைக்க திவாவிற்கு வெட்காக இருந்தது.
'சொரிடா மச்சான். உனக்கு நன்றியடா நன்றி நன்றி' என்று பலதடவை கூறினான்.'காதல் வந்தால் எல்லாம் மறந்திரும்தான். பரவாயில்ல உன்ர நிலை புரியிதுடா. ஓ.கே. பாய்' என்று விடைபெற்றான் பார்த்தீபன்.
இப்போது அவனது மனம் ஓரளவு குளிர்ந்தது. சங்கவிக்கு உடனே ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று காகிதமும் பேனையுமாய் குந்தியவன் என்னவென்று எழுதுவதெனத் தெரியாமல் தவித்தான். பின்பு,

                                                                                    அன்புடன் சங்கவிக்கு என்று எழுதத் தொடங்கினான். உனது தியாகத்தால் நான் நலமாக இருக்கின்றேன். நீ எப்படி இருக்கின்றாய் என்று அறிய ஆவலாய் இருக்கின்றேன். உனக்கு என்னை யாரென்று நினைவிருக்காது. எனினும் என்னைப்போல பலபேரை காப்பாற்றி இருப்பாய். அவர்களின் வாழ்வுக்காக உன் வாழ்வின் வசந்தங்கள் பலவற்றை நீ இழந்திருக்கலாம். நானும் எனது குடும்பமும் உன்னை என்றுமே மறந்துவிட முடியாது. என் உடலில் உன் குருதி கலந்திருக்கிறது. நாம் இருவேறு உடல்கள். ஒரு உயிர்தான் என்று உணர்கின்றேன். காலத்தால் செய்த உதவி ஞாலத்திலும் மானப் பெரிது என்பார்கள். சங்கவி உன் உதவிiயை நான் வாழ்நாள் உள்ளவரை மறக்கவே மாட்டேன்.அதுசரி சங்கவி,உனக்கு என்ன நடந்தது? வன்னிப்போரில் கடைசிநாள்வரைக்கும் ஒரு வைத்தியராக இருந்து எத்தனை உயிர்களை காப்பாற்றியவள் நீ. எத்தனை பேருக்கு ஆலோசனைகளையும் ஆறுதலையும் தந்தாய். இன்னும் எத்தனை பேர் உன் பெயரைச்சொல்லி உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
                              கண்ணே, நீ மட்டும் எதற்காக இப்படி இருக்கிறாய்? என்னால் இதனை தாங்க முடியவில்லை. உன்னாலும் மனுசியாக வாழமுடியும். என்னைப்போல சுயநலமாக வாழ்ந்து திரிந்தவளல்ல நீ. உயிரே மிச்சமென ஊசலாடிய அவகாசமற்ற அந்தப் பொழுதிற்கூட ஓயாது உழைத்தவள் நீ. எந்த மனிதனின் நெஞ்சில்தான் கவலைகள் இல்லை சொல்லு. எல்லோரும் பைத்தியகாரர்கள் ஆகிவிட முடியுமா? விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடத்தான் வேண்டும். அவல வாழ்க்கைக்குள் மூழ்கிப்போகும் சில உள்ளங்கள் அதிலிருந்து விடுபடத் துணிவிருந்தாலும் கடந்தகால நினைவுகள் அவர்களை எழுந்திருக்க விடுவதில்லை. மற்றவர்களுக்காக ஓயாமல் எழும் எண்ணங்கள் தனக்கென வரும்போது மட்டும் மௌனித்துப்போகின்றன.
                                      வாழ்க்கை ஒரு சவால். துணிந்து செயற்படுபவனே சாதிக்க முடியும். வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அதனை நடைமுறைப் படுத்துபவனுக்கல்லவா அதன் கடினம் புரியும் என்று நீ பேசுவது எனக்குக் கேட்கிறது. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் இனி நடக்கப்போவதைச் சந்திப்போம். ஏன் சங்கவி உனது தொழிலை தொடர்ந்து செய்ய நீ முயற்சிக்கவில்லையா? நீ வாழாவிட்டாலும் மற்றவர்களுக்காக உருகும் மெழுகுவர்த்தியாய் இருக்க முயற்சி செய். எப்பொழுதும் நீ நீயாகவே இரு. எமது விடுதலைப் போராட்டம்தான் தோற்றுவிட்டது. உணர்வுகள் சாகடிக்கப்பட்டு விட்டாலும் உணர்வுகள் சாகா வரம்பெற்று இருக்க வேண்டும். நான் இதைச் சொல்ல, அதுவும் உனக்குச்சொல்ல அருகதை அற்றவன்தான். இதுவரை பச்சைச் சுயநலவாதியாகவேதான் இருந்தேன். இனிமேலாவது திருந்தி வாழவேண்டும் என்று முயற்சிக்கின்றேன். தயவுசெய்து நீ மாறிவிடு. சொல்வதற்கு நீ யார் என ஏளனமாகச் சிரிக்கிறாயா? சொல்கிறேன். நான் யாரென்று சொல்கிறேன்.
                                                                         இடம்பெயர்ந்து பல வடுக்களைத் தாங்கிய வன்னி மக்கள் இனி எதுவுமே தேவையில்லை. உயிர் மட்டும் போதும் என்ற நிலையில்தானே போரின் இறுதிநாட்களில் இருந்தார்கள். அது உண்மைதான். அலுவலகங்களோ பாடசாலைகளோ இயங்கவில்லை. உயிர் வாழ்விற்கான அத்தியாவசியத் தேவைகளை மட்டும் பயந்து பயந்து செய்து முடித்தார்கள். அநேகமான நேரங்களை காப்பகழிகளில்தான் கழித்தார்கள். நான்கூட என் உயிரைப் பாதுகாக்க அப்படித்தான் இருந்தேன். ஆனால் நீ அப்படி வாழவில்லை. மருத்துவமனையில் விளக்கேந்திய பெருமாட்டியாய் இரவு பகலாய் கண்விழித்து நின்றவள்.  சீறிவரும் சன்னங்களுக்கும் சிதறிப்பாயும் குண்டுகளுக்கும் நடுவே நின்று வேலை செய்தவள். சேவை செய்தவள்.
நானும் எனது குடும்பமும் முள்ளிவாய்க்காலில் பதுங்குகுழி ஒன்றின்மேல் தறப்பாளைக்கட்டி பதுங்கு குழிக்குள்ளேயே இருந்தோம். எங்களிடம் எஞ்சியிருந்தது ஒரு தறப்பாளும் ஒரு பானையும் சட்டியும் மூன்று கோப்பைகளும் மட்டுமே. உன்னிடம் அதுவும் இருந்திருக்காது. எறிகணைகளோ தாறுமாறாக விழுந்துகொண்டிருந்தன. அன்றும் வழமையைப்போல காலை ஆறு மணியிலிருந்து நண்பகல்வரையும் வெளியில் தலை காட்டவே முடியவில்லை. எனது தங்கையின் பிள்ளை பவிதாவைச் சமாளிப்பது எல்லோருக்கும் பெரிய சிரமமாக இருந்தது.
'வெளிய போகப் போறன். நான் வெளிய போகப் போறன்.' என்று அடம்பிடித்து அழுதுகொண்டிருந்தாள்.

                                                   'அழுதால் அழட்டுக்கும். பிள்ளை ஒண்டும் கரைஞ்சு போயிடாது. வெளிய போகவிட வேணாம்.' என்று அம்மா இரைந்தார். என்னாலும் தொடர்ந்து காப்பகழிக்குள் இருக்கமுடியவில்லை. ஒரே குழிக்குள் பன்னிரண்டுபேர் இருந்தோம். கால்கைகளை அசைக்கக்கூட இடமில்லாத நெருக்கடியில் அதிக நேரத்திற்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. முழங்கால்கள் மடிந்தபடியே நீண்டநேரம் இருந்ததால் மூட்டுகள் வலித்தன. என்னடா நரக வாழ்க்கை இது என்று விரக்தியும் சலிப்பும் எழுந்தாலும் உயிரை காப்பாற்றிக் கொள்தற்காக அந்த வலிகளையும் சகித்துக்கொண்டு கிடந்தோம்.
பகற்பொழுது கழிந்து மாலையாகியபின்னும் கடற்கரையில் வெயில் தாளவில்லை. ஒவ்வொருவராக வெளியில் வந்துநின்று பெரூமூச்சுகளை விட்டுக் கொண்டோம். எமக்காகவே குறிபார்த்து எறியப்பட்டதைப்போல எறிகணையொன்று திடீரெனக்கூவிவந்து எமக்கருகில் வெடித்துச்சிதறியது.

                                                           திவாவினால் தொடர்ந்து எழுத முடியவில்லை. அவ்வளவுநேரமும் எழுதிய      தனது பழைய நிலைமையை மீண்டும் நடப்பதைப்போலவே உணர்ந்ததனாலோ என்னவோ மனம் பதறியது. உடல் மிகவும்சோர்ந்துபலவீனப்பட்டது.விரல்கள்பேனைபிடிக்கக்கூடவலுவற்றுவிட்டனபோல உழைந்தன..............................தொடரும் ...........................

மிதயா கானவி

Thursday, 20 February 2014

கருணை நதி பாகம்-6

                                      
                                                                                                                                                                                                                                                                                                                               உணர்வுகள் எல்லாம் செத்துவிட்டவளாய் அவள் மெதுவாக வந்தாள். தாய்தான் அவளிற்குக் கிட்டவாகச்சென்று கம்பி வேலிக்கு மேலாகக் கைகளைப்போட்டு தன் மகளைக் கட்டியணைக்க முயன்றாள்.'யார் நீ?'என்கின்ற தோரணையில் வெறித்துப் பார்த்தாள் மகள். அவ்வளவுதான். அந்தத்தாயின் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.ஏனென்று தெரியாமலேயே மகளும் அழதாள்தாய்தான் தன் மனதைத் தேற்றிக்கொண்டு என்ன நடந்ததென மகளிடம் கேட்டறிய முயன்றாள். எனினும் அதைப்பற்றி ஒருவார்த்தைகூடக்கேட்காமலேயே சந்திப்புக்கான நேரம் முடிவடைந்துவிட்டது.எல்லோரையும் ஒவ்வொருவராக கடமையில் நின்ற சிப்பாய் வெளியில் அனுப்பினான்.அந்தத் தாயாரையும் பத்தே நிமிடத்திற்குள் வெளியேற்றிவிட்டான். எதுவுமே பேசாத அழுகையுடன் மாத்திரமே அவர்களின் சந்திப்புநேரம் முடிந்துவிட்டது. அப்படித்தான் அங்குநின்ற பலரது நிலைமையும் அமைந்திருந்தது. அந்தத் தாயார் மனதுக்குள் அழுதுகுளறியபடியே வெளியேறினார்.

                                            அவளின் வாழ்க்கை வழிநெடுக, வலியும் வேதனையும் நிராகரிப்பும் நிறைந்ததாய் நகர்ந்து கொண்டிருந்தது. அம்மாவைப் பார்த்தபின் அவளது மனது ஓரளவு அமைதிப்பட்டிருந்தது எனலாம். ஆனாலும் உடல் நோயெதிர்ப்புச் சக்தியை இழந்தமையால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். நோயின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க மேலதிக சிகிச்சைக்காக அவள் மருத்துவமனைக்குச் செல்லவேண்டி இருந்தது.   அன்று திங்கட்கிழமையாக இருந்தமையால் நோயாளர்களது நெருக்கடி மருத்துவமனையில் அதிகமாகவே இருந்தது. அவளும் முகாமிலிருந்து வைத்தியசாலைக்கு வந்திருந்தாள். அன்று திவாவும் தனது மேலதிகாரியுடன் மருந்துவமனைக்கு வந்திருந்தான்.

                                             எதிர்பாராத விதமாக அவளை மருத்துவமனையில் கண்ட திவாவிற்கு உணர்வுகள் கொந்தளித்தன. அவனது கால்கள் இயங்க மறுத்தன. தன்னை ஒருவாறு அமைதிப்படுத்த முயன்றபடியே அவளருகே வந்துசேர்ந்தான்.
'அக்கா,' என்று விக்கித்தான். எங்கோ கேட்ட குரலாய் இருக்கிறதே என்று நினைத்தபடி திரும்பிய அவளின் பார்வையில் புதிய ஒளி பிரகாசித்தது. ஆனாலும் அது அதிக நிமிடங்கள் நிலைத்து நிற்கவில்லை. மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டது.அடுத்து வைத்தியரிடம் உள்ளே செல்லுமாறு தாதி அழைத்தார்.
'சங்கவி,சங்கவி. வாங்க. உள்ள போங்க'திவா துடித்துப் போனான். வாழ்க்கையில் என்னென்ன விசித்திரங்கள் எல்லாம் நடக்கின்றன. ஏனிப்படி? எத்தனை நாட்களாய் அறிந்த தெரிந்த ஒருத்தியின், மிகவும் வேண்டப்பட்டவளாய் மனம்சொல்லும் ஒருத்தியின் பெயர்கூடத் தெரியாமல் கடந்த அந்த நாட்களை நினைக்க அவனுக்கு விசித்திரமாகத்தான் இருக்கிறது.
'சங்கவி.... சங்கவி.....'என்று முணுமுணுத்தது அவனது இதயம். அவளது பெயரை அறிவதற்காக எத்தனை தடவைகள் அலைந்திருப்பான். இதோ அவளின் பெயரைத் தெரிந்துகொண்டுவிட்டான். அவளுக்கு அருகில்தான் நிற்கிறான். சங்கவி எப்போது வெளியில் வருவாள் எனக் காத்திருந்தான். எனினும் உள்ளேசென்ற அவள் விரைவில் வருவதாகக் காணவில்லை. அவனது அவசரத்திற்கு வைத்தியரிடம் சென்றவள் உடனேயே திரம்பி வருவாளா?
                                                   நேரமோ வேகமாக ஓடியது.திவா மேலதிகாரியுடன் புறப்படவேண்டி இருந்தது. அரிய சந்தர்ப்பத்தை விட்டுவிட்டுச்செல்ல மனமின்றித் தவித்தான். அதே மருத்துவ மனையில் வேலை செய்யும் பார்த்தீபனின் உதவியை நாடி ஓடினான். 'தீபன், எனக்கொரு உதவி செய்யணும்' என்ற திவாவின் குரலில் அவசரம் தெரிந்தது.
'யாருக்கு என்ன? உடம்பு சரியில்லையா?''இல்ல மச்சான். நான் அவசரமா போகவேண்டி இருக்கு. வைத்தியரின் அறையில் எனக்குத் தெரிந்த ஒருவர் போயிருக்கிறார். பெயர் சங்கவி. அவளது தற்போதைய முகவரியை வாங்கி எனக்கொருக்கா போன்ல சொல்லணும்''அவ்வளவுந்தானா. செய்தால் போச்சு. நானும் பார்;த்தால் போச்சு.''அவள் உன்னோட கதைப்பாளா தெரியேல்ல. மஞ்சள் நிற சுடிதார் போட்டிருக்கிறாள். மெனிக்பாம்ல இருந்து வந்திருக்கவேணும்.' என்றபடி தனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்தான்.
'நான் போட்டுவாறன்டா' என்றவன் இரண்டடி வைத்துவிட்டு
'மறந்திடாதடா' என்றான்.'கவலைப்படாமல் போ மச்சான். நான் இப்பவே போய் விசாரிக்கிறன்' என்று கையசைத்தான் பார்த்தீபன்.
                           
                                         அலுவலக வேலையைக்கூட திவாவினால் நிம்மதியாகச் செய்ய இயலவில்லை. யார் தொலைபேசி எடுத்தாலும் பார்த்தீபனோ பார்த்தீபனோ என்று பலதடவை ஏமாந்தான். அவனின் தொலைபேசி இலக்கத்தை வாங்காமல் வந்ததுதான் பெரிய தப்பு. இவனாவது எடுத்துக் கேட்டிருப்பான். அந்தநேரம் அவனது இலக்கத்தை வாங்கத் தோணவில்லையே.... அவளைக் கண்டால் நான் கொதித்துப் போகிறேனேன்? ஏனென்றே புரியவில்லை. சங்கவியுடன் ஒருநாள்கூட நான் என்னைப்பற்றிக் கதைக்கவில்லை. ஏன் என்னால் அவளை மறக்க முடியவில்லை?மனமே ஏன்? ஏன் இப்படி ஏமாற்றப்படுகிறேன்? நான்; முற்பிறப்பில் யாரையும் ஏமாற்றி இருப்பேனோ? இன்றுகூட சற்று முன் அவளைக் கண்டிருந்தால் அவளுடன் கதைத்திருப்பேனே. சங்கவி என்னிடம் மனம்விட்டுக் கதைத்திருப்பாளா? இல்லை உன்னைத் தெரியாது என்று அவமானப் படுத்தியிருப்பாளா?பதிலை யாரிடம் கேட்கலாம்? அவள்தான் காணல் நீராய் என்முன்னால் தோன்றி மறைந்து போகிறாளோ?
                                                                       இன்று எதற்காக வைத்தியசாலைக்கு வந்திருப்பாள்? சின்னச்சின்ன வருத்தங்களுக்கெல்லாம் முகாமைவிட்டு வெளியில் அனுப்பமாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியும். அப்படியானால் பெரிய வருத்தம்தானோ? என்றெல்லாம் அவனது மனது அவளுக்காகத் துடித்துக்கொண்டிருந்தது. வீட்டில்கூட யாருடனும் அவன் மகிழ்ச்சியாகப் பேசுவதில்லை என்றானது. தானும் தன்பாடுமாக இருந்தான். படுப்பதற்கு அவனுக்குப் பஞ்சணை இருந்தது. பார்ப்பதற்கு சினிமா இருந்தது. உண்பதற்கு அம்மா சமைத்துவைக்கும் சுவையான உணவு இருந்தது. எனினும் எதிலுமே அவனுக்;கு நாட்டம் இருக்கவில்லை. சங்கவி. சங்கவி உன்னை நான் எப்ப பார்த்து கதைப்பேன். எப்பிடியெல்லாம் தேடி அலையிரன். நீ மட்டும் அப்பப்ப வந்து என்ர மனசைமட்டும் தொட்டுட்டு ஓடிருவாய். இது உனக்கே சரியாய் இருக்கா? நான் படும்பாடு உனக்கெப்படிப் புரியப் போகிறது? உன்னை நான் பார்த்தபோது நீ அணிந்திருந்த கிழிந்த பாவாடையும் அதற்குப் பொருத்தமில்லாத சட்டையுமாய் நீ முகாமில நின்ற தோற்றம்தான் கண்ணுக்குள நிக்கிது. ஆனால் இண்டைக்கு மஞ்சள் சுடிதாரோட பார்த்தது மனதுக்கு ஓரளவு நிம்மதியா இருக்கு. சங்கவி உனக்கு என்ன நடந்தது? ஏன் மாறினாய் என்று அறியாமல் துடிக்கின்றேன்' என்றெல்லாம் தனக்குள்ளேயே நொந்துகொண்டு படுத்திருந்தான்.

                                      அவனது தொலைபேசி சிணுங்கியது. வேண்டா வெறுப்பாக எடுத்தான்.
'ஹலோ, யார்?'
'ஹலோ மச்சான் நான் பார்த்தீபன்'
என்றதும் திவா துள்ளி எழுந்தான். ..................தொடரும் ..................

மிதயா கானவி



Friday, 14 February 2014

கருணை நதி பாகம் -05

                     
                                                                                                                                                                             திவாவின் இதயம் ரணமானது. தனது கௌரவத்தைக்கூடப் பார்க்காமல் எழுந்து அவளின் பின்னால் ஓடவேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால் அவ்வாறு அவன் செய்யவில்லை. ஒருவாறு தன்னைச் சுதாரித்துக்கொண்டு அவன் மட்டும் இருக்கையில் இருந்தான் மௌனமாக. மனமோ அவளின் பின்னால் கடல் அலைகளின் கொந்தளிப்புப்போல் இரைந்தபடி ஓடியது.
                
                            அந்த ஒன்றுகூடல் முடிந்தவுடன் முகாமைவிட்டு அவன் வெளியேற வேண்டியவன் ஆனான். திவாவிற்கு இதயத்தில் பாராங்கல்லை வைத்திருப்பதைப்போல சுமையாகக் கனத்தது. ஒன்றுகூடல் முடிந்ததும் அவனுடன் வந்தவர்களுடன் அவனும் முகாமைவிட்டு வெளியேறினான்.
பல இலட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் வைத்திருப்பதைப்பற்றி எல்லாஊடகங்களிலும்பரபரப்பான       செய்திகள் வந்தவண்ணமேதான் இருக்கின்றன.                                                                                                                 யாழ்ப்பாணத்தில்இருந்தஅவளின்தாய்துடித்துப்போனாள்.                                                                                அவளுடனான சிறிய முரண்பாடு காரணமாக நீண்ட நாட்களாக தாய் கோபத்துடன் இருந்தார். ஆனாலும் அவள், தான் பெற்ற பிள்ளை அல்லவா? அவள்தான் அந்த வீட்டின் கடைக்குட்டி. கஸ்ரமென்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவள். இப்போது அவளுக்கு எத்தனை வயதாக இருந்தாலும் அம்மாவுக்கு அவள் எப்போதுமே சிறியவள்தான். அவளைப்பற்றி பலரிடம் விசாரித்துக்கொண்டுதான் இருக்கிறார். எந்தவொரு தகவலும்தான் கிடைக்கவில்லை. ஐயோ என்ர பிள்ளை எங்க எண்டாலும் உயிரோட இருக்க வேண்டும் என்று அந்தத் தாய் ஏறி இறங்காத கோவிலே இல்லை. இரண்டு மாதங்களாக வவுனியாவிற்கு வந்து மகளைத்தேட முயற்சித்தார். இறுதியாக எல்லா விசாரணையும் முடித்து பார்ப்பதற்கான அனுமதி தாயாரிற்கு வழங்கப்பட்டது. அதுவும் ஏ-9 பாதையின் ஊடாகச் செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் அச்சமும் கொஞ்சம் எட்டித்தான் பார்த்தது.
                                                        அதிகாலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்திற்குச் சென்றுவிட்டார். அந்தத் தாயாரிற்குத் தெரிந்தவர்கள் என்று அங்கு யாரும் இருக்கவில்லை. நெஞ்சம் இலேசாய் படபடக்கத்தான் செய்தது. ஜன்னலோரமான இருக்கையில் அந்தத்தாய் அமர்ந்து கொண்டார்.
வயதானஒரு மூதாட்டிம் அருகில் அமர்ந்தார். சரியாக 6.00 மணிக்கு இராணுவத்தினரின் ரக் வண்டியைத் தொடர்ந்து சுமுகமாக இவர்களின் பேருந்தும் போய்க்கொண்டிருந்தது. பேருந்தும் பயணித்துக்கொண்டிருக்கவே அந்தத் தாய் பேருந்துள் இருந்தவர்களை அவதானித்தார்.
அந்தத்தாய்க்கு நிலைமை புரிந்தது. அநேகமானவர்களின் தலைமுடி வெளீரென மின்னின. ஐம்பதைத் தாண்டிய முதியோர்கள்தான் பேருந்தில் பயணிக்கின்றோம் என்பதை நினைக்க உசாராகவே இருந்தது. பேருந்து மீசாலையைத் தாண்டி வரவும் எல்லோரும் தெய்வங்களை வேண்டி வாயினுள் முணுமுணுத்தார்கள்.

               பளை, முகமாலைப் பகுதியை  அண்மிக்க பயம் கொஞ்சம் கொஞ்சமாய் நெஞ்சை அடைப்பதைப்போல இருந்தது. தலையறுந்த தென்னைகள் அரையும் குறையுமாக எரிந்த வாகனங்கள், பெரிய பெரிய மண் அரண்கள் எல்லாமே போரின் வடுக்களைத் தாங்கி  நின்றன. அந்த இடங்களில் இராணுவ வீரர்கள் மழைக்கு முளைத்த காளான்களைப்போல அங்குமிங்கும் நின்றனர்.
இன்னுமொரு பகுதியினர் முகமூடிகளை அணிந்துகொண்டு நின்று மண்;ணை கிளறிக்கொண்டிருந்தனர். அவர்கள் கண்ணிவெடிகளை அகற்றுகின்றார்கள் என்றும் அவர்கள் அணிந்திருப்பது தற்பாதுகாப்புக்கான முகமூடி என்பதும்          அந்தத் தாயாரிற்கு புரிந்தது.
                                                அவர்களின் பேருந்து ஆனையிறவை அடைந்தது. வெளியில் அமைதியாக இருந்தாலும் உள்ளே பயங்கர சுழிகள் நிறைந்த கடலின் சுழற்சிபோல மனம் வேகமாக சுழன்றுகொண்டிருந்தது.ஆனையிறவை புலிகள் மீண்டும் கைப்பற்றியபோது உலகமே அதிசயித்து நின்றதும், ஏன் அந்தத் தாய்கூட ஆச்சரியப்பட்டு தமிழ், சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளையெல்லாம் ஒன்றுவிடாமல் விழுந்து விழுந்து படித்ததும் இப்போது அவருக்கு நினைவில் வந்தன.
                                                         பரந்தன் சந்தியில் பேருந்து சில நிமிடங்கள் நின்றன.ஐயோ என் மகள் உயிருடன் இருப்பாளா? இப்படியான கெடூரமான போரில் அவள் எப்படித்தான் தப்பியிருப்பாள்? என்று அந்தத் தாயாரின் மனம் நியாயமாகக் கேள்விகேட்டு பதில் தெரியாமல் வரண்டு தவித்தது.மோட்டார் கருவிகளோடு சந்தியிலிருந்த புலிவீரன் குட்டிசிறியின் சிலை, நிலத்தில் விழுந்து குப்புறக்கிடந்தது. சின்னாபின்னமாகச் சிதறிக்கிடக்கும் வீடுகள், கடைகள், பாடசாலைகள், கூரைகளுடன் இடிந்து பிரண்டு கிடக்கும் பெரிய மண்டபங்கள்,பரந்தன் சந்தியிலிருந்த ஊர்தி சுத்திகரிப்பு நிலையத்தில் எரிந்து கருகி எலும்புக்கூடாய்க்கிடக்கும் வாகனங்களின் எச்சங்கள். 

                                          கிளிநொச்சி விளையாட்டு மைதானத்திற்குப் பக்கத்தில் இருந்த கிளிநொச்சி நகரத்துக்கான நீர்த்தாங்கி,அரைவாசி மண்ணில் புதைந்து தெரிந்தது. இவற்றைப் பார்த்த அந்தத் தாயாரிற்கு இந்த இடத்தில் யாரும் உயிர்தப்பி இருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது.'என்ர செல்ல மகளுக்கு உயிருக்கு ஒன்றும் நடந்திருக்கக்கூடாது' என்று மனதில் நினைத்தபடி, அடியோட சரிந்துகிடந்த முருகனைப் பார்த்ததும், சிதைந்து கிடந்த மாதாவைப் பார்த்தும் வணங்கியபடியேதான் இருந்தார் அந்தத் தாயார்.

                                                          கிளிநொச்சி பொது மருத்துவமனையைப் பார்த்து கதிகலங்கினார். இதற்கே இந்த நிலையா? இங்குதான் என் பிள்ளையும் நின்று வேலை செய்தாள். ஜன்னல் ஊடாகத் தலையை நீண்டி மருத்துவமனை வளாகத்தை பார்த்தார் அந்தத்தாயார்.அந்த இடமோ எந்தச் சன நடமாட்டமும் அற்று, சுடுகாடாய் தெரிந்தது.வீதியோரமாக வளர்ந்திருந்த புதர்கள், வேலிக் கிளுவைகள் எல்லாம் சடைத்து நின்றன. பெரிய மரங்களெல்லாம் கந்தகப் புகையால் கருகி பெரிய பெரிய பூதங்கள் நிற்பதைப்போல அச்சமூட்டின.
ஒட்டிய வயிறுடன் நாக்குத் தொங்க சிதைந்த வீட்டு வாசலிலே தனது எஜமானை எதிர்பார்த்துக் கிடக்கும் நாயைப் பார்க்க இன்றைக்கோ நாளைக்கோ அது செத்துவிடும்போலத் தெரிந்தது 'நாங்கள் இன்னமும் உயிருடன்தான் இருக்கின்றோம்' என்று சொல்வதைப்போல நான்கைந்து பசுமாடுகளும் சில கன்றுகளும் பேருந்துக்கு எதிராக வீதியை ஊடறுத்துத் துள்ளிப் பாய்ந்தன. அந்தத்தாய் கண்களை மூடி சற்று அயர்ந்துவிட்டார்.
                                                                              அன்றிரவு வவுனியாவில் இருந்த விடுதி ஒன்றில் தங்கிவிட்டு காலையில் மகளைத்தேடும் படலத்தைத் தொடங்கினார்.கச்சேரிக்குச் சென்று மகளின் பெயர் முகவரியைக் கொடுத்து விசாரித்துப் பார்த்தார். உறுதியில்லாமல்தான் என்றாலும் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் இருக்கலாம் என அறிந்து கொண்டாள். துடித்துப் பதைத்தபடிதான் தன் பிள்ளையைப் பார்க்க மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்குச் சென்றார்.
                                                முதல் பேருந்தில் ஏறி காலை 6.00 மணிக்கே முகாம் வாசலுக்கு வந்துவிட்டார் அந்தத் தயார். 9.00 மணிவரை அந்த முகாமிலுள்ள காவல் அதிகாரியின் தற்காலிக அடைப்பில் காத்துக்கிடந்தார். உணர்வுகள் அம்புகளைப்போல மனதுக்குள் மாறி மாறிப் பாய்ந்து கொண்டிருந்தன. தன் செல்ல மகள் எப்படி இருப்பாளோ? கடைசியாக அவளைப் பார்த்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. தாயின் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.
                                                        சனங்கள் உறவினர்களைப் பார்ப்பதற்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள். அந்தத் தாய்க்கு எல்லாமே புதிதாகத்தான் இருந்தது. தன் மகள் இப்போது எப்படி இருப்பாளோ? தன்னால் அவளை இனங்காண முடியுமோ? அவள் தன்னைக்கண்டுவிட்டு கதைக்காமல் போய்விடுவாளோ? என்றவாறான ஏக்கங்களுடன் முட்கம்பி வேலிக்குள் அந்தத்தாய் நிற்கின்றாள்.என் மகள் வருவாளா, வருகிறாளா? என அந்தத்தாயின் கண்கள் அங்குமிங்கும் பறந்துகொண்டிருந்தன. பதற்றமும் ஏமாற்றமும் ஏக்கமும் அவரின் மனதைப்போட்டு வாட்டி வதக்கிக்கொண்டிருந்தன.         --  தொடரும் ...............

மிதயா கானவி

இப்படியும் காதல்


                                       பிரங்கி வேட்டுக்களும் வெடிச்சத்தங்களும் இடைவிடாது தொடர்ந்து கொண்டேயிருந்த அமைதியற்ற அந்த பொழுதில் அதிகாலைப்பனிதடவும் செம்மையும்.முல்லைக்காற்றும் கூடவே தன் சுயத்தை இழந்து உஜ்ணத்தை தாங்கியிருந்தது.
                                                                                                                                              அஞ்சனா வேகமாகமிகவேகமாகஊசிமருந்துகளைஏற்றுவதற்குதாயராகிக்கொண்டிருந்தாள்.ள்அந்த அவசரசிகிச்சைவிடுதியின் மங்கலானவெளிச்சத்தைமேவியஏறிகணைகளின் ஏவும்போது தோன்றும் ஒளிகள்அனைவரையும்அச்சமூட்டிக்கொண்டேயிருந்தது.கால்களில் சில்லைக் கட்டிக்கொண்டு சுழன்று கொண்டிருந்தமருத்துவபணியாளர்களில் அஞ்சனாவும் ஒருத்தியானாள்.ஊசியென்றாலே ஊரைக்கூப்பிட்டு கத்தும் குழந்தைகள் கூட அமைதியாய் கிடந்தனா் எல்லாம் புரிந்த ஞானிகளைப்போல் அவர்களரின் இயல்பை போர் பறித்து சென்று நிண்டநாளாயிருந்தது.
                                                               இருபதாவது கட்டிலில் வேறு ஒருநோயாளி படுத்திருப்பதைப்பாா்த்து நெஞ்சில் ஈரம் வற்றிக்கொண்டது அஞ்சனாவுக்கு “இதிலே இருந்த ஜயா எங்க போயிட்டார்  “என்றாளாள் உரமான தொனியில் சேலைன் போத்திலும் பிடுங்கப்பட்டுகிடந்தது .மருத்துவ உதவியாளன் ரமணனை தவிர அங்கு பதில் சொல்வதற்கு யாரும் முயலவில்லை
அக்கா“ இரவு விழுந்த செல்லோடதான் ஆள் கிண்டியிருக்கனும் பாா்த்திட்டு வாறன்”என்று சொல்லியபடியே அவசரமாய் விடுதியை விட்டு வெளியேறினான்.
                         இந்த மனுசன் எங்க போய்மாட்டிற்றோ வயித்துக்காயம்  நெஞ்சில் இரண்டுபக்கமும் குழாய் வயித்தில குருதிகசிவும் இருந்தது உடனவராட்டிக்கு காப்பாற்ற முடியாது .இந்தாளோட எவ்வளவு போராடித்தான் உயிரைப்பிடித்து கொடுத்ததை நினைக்க எரிச்சலாய்க்கிடந்தது.
ஆனாலும் மருத்துவமனைகளிலும்  உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில் யாரிலும் பிழை சொல்லிவிடமுடியாதவளாய் மருத்துவமனையிருந்த வளாகத்தின் முன்பகுதியை அடைந்தாள். பலநுாறு நோயளர்களையும் கடந்து ஜயாவை சல்லடைபோட்டுதேடியதுஅஞ்சனாவின் கண்கள் மட்டு மல்ல மனமும்தான்.
சூறையாடப்பட்டு கிடக்கும் அந்த நிலத்தில் கண்ணுக்கு எட்டியதூரத்தில் தலை கொய்யப்பட்ட ஒற்றைபனையடி ஒரத்தில் இருக்கும் உருவத்தைக்கண்டு விரைந்தாள் .
நரைவிழுந்து காய்ந்து பறப்புக்கள் அற்றுபோன அவள் தலையை மெதுவாய் வருடிக்கொண்டிருந்தாா் ஜயா  ஊசி ஏற்றியபடியே இரத்தம் காய்ந்து போய்க்கிடந்த கட்டுதுணியால் கட்டியிருந்தது அவா் கைகள் .அந்த காட்சியை பாா்த்து மனம் நெகிழ்ந்தாலும் கோபம் உச்சத்தை அடைந்தவளாய் “நேற்று ஊசி ஏத்திவிடப்  பட்ட பாடு எங்க வந்து கிடக்கிறியள் கெதியண்டு எழும்புங்கோ ”ஊசி களரட்டும் தெரியும் இண்டைக்கு ஒப்றேசனும் செய்ய ஏலாது ” என வாா்த்தைகள அடிக்கிகொண்டு போனாள் ஜயா எதையும் பொருட்படுத்தாது பொக்கை வாய்திறந்து மழழை ஆகினாா் இவள் என்ர காதலி இவளைத்தேடித்தான் வந்தனான்  வாழும் போது கிடைக்காத காதல் சாகும் போது கிடைத்திருக்கு என்றேல்லாம் ஏதோ நிறைய தத்துவங்களைச் சொல்லிக்கொண்இருந்தாா். அஞ்சனாவுக்கு எதுவும் விளங்கவில்லை காதலை புாியும் நிலையில் அவள் அங்கு இல்லை

எழும்புங்கோ என கையைபிடித்து இழுத்தாள் .“எத்தனை பேரைவிட்டிற்று வந்து நிக்கின்றேன் வாங்கோவன் கெதியண்டு “என்று கத்தினாள் மருத்துவா்களின் ஒவ்வொரு நிமிடங்களிலும் ஒவ்வொர் உயிர்கள் வரழ்ந்து கொண்டிருந்த நாட்கள் அவை”  பிள்ளை இவளையும் வோட்டுக்க கொண்டுவரவா “கெஞ்சினார் அவசரசிகிச்சை விடுதியில் எண்பதுக்கு மேல் நோயர்கள் ஜயாக்கு தெரியம் தானே என்றவளின் முன்னால் வலது கையில் சேலைன் போத்தல் வெளியில் சலம் சேகரிக்கும் பைகுருதிபைகள் என்பவற்றுடன் இடது கையால் முதிர்ந்து போயிருந்த காதலியையும் பிடித்துக்கொண்டு முதிராத நினைவுகளுடன் நடக்கத் தொடங்கினாா்
விடுதியில் வந்து சேரவும் ஜயாவின் உடல் நிலைமை மோசமாகியது உடனடி சிகிச்சைகளை தொடங்கிவிட்டு
இன்று வரும் ஜ.சீ ஆா் .சீ கப்பலில் ஜயாவையும் அனுப்ப தாயா்படுத்திக்கொண்டிருந்தாள் ஆனாலும் அவர் தன் காதலியை இந்த இடத்தில் வீட்டுபோக மறுத்துவிட்டார் எவ்வளவு சொல்லியும் கேட்கவேயில்லை மருந்தில்லை ,குருதியில்லை ,இனி உங்கள் உயிரைத்தாக்குப்பிடி்க்க முடியாது என்ற அஞ்சனாவிடம்...........

                                   காய்ந்து தொங்கும் மாா்பகங்களுடனும் சுருக்குக்கள் விழுந்து முதிா்ந்து போன தன் உடலையும் சற்றும் பொருட்படுத்தாது வற்றிப்போய் இருக்கும் கை நாளங்களைக்காட்டி ”அம்மா என்னில் குருதியெடுத்து ஜயாவுக்கு ஏத்துங்கோ ” அவரை காப்பாற்றிவிடுங்கோ கோடி புண்ணியம் கிடைக்குமென  ”என சிறுபிள்ளையாகி கெஞ்சிக்கொண்டிருந்தாள் அந்த காதலி

Monday, 10 February 2014

கருணை நதி பாகம் 4










அந்தப் புனர்வாழ்வு முகாமில் அவளும் அவளது நண்பிகள் இருவரும் இருந்தார்கள். அவர்கள் மூவரும் வன்னிப்போரில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு மனதளவில் மிகவும் நொந்துபோயிருந்தார்கள். இப்படித்தான் வாழவேண்டும் என்ற எந்த லட்சியமும் தெரியாதவர்களைப்போல அல்லது இல்லாதவர்களைப் போலத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வெளிப்படையாகச் சொன்னால் நடைப்பிணங்களாகத்தான் உயிர்வாழ்ந்தார்கள்.

                                              அங்கிருக்கும் பலர் அவளில் இரக்கப்படுவதைப்போலப் பார்த்தாலும் அவள் எவருடனும் கதைப்பதில்லை. தன்னைப்பற்றி எவரிடமும் அவள் வாய்திறப்பதே இல்லை. அதனால் அவளை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. தனியே அழுவாள். சிலவேளைகளில் சிரிப்பாள். தலையைப்போட்டு அடித்துக்கொள்வாள். எனினும் நிதானத்துடன் நடந்தும் கொள்வாள். நினைவுகளால் நாளுக்குநாள் அரிக்கப்பட்டு விரக்தியின் விளிம்பில்த்தான் நின்றாள். உண்மையில் அவள் யாரென்று அவளுக்கே புரியவில்லை.

                                              திவா அந்த முகாமைவிட்டு வெளியேறி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. நீண்டநாட்களுக்குப்பின் அவனுக்கு மாதாந்தக் கொடுப்பனவு கிடைத்தது. அந்தப்பணத்தில் அவளுக்குப் பொருத்தமான அளவில் மெல்லிய நீல நிறத்தில் சுடிதார் ஒன்றை வாங்கி அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வீட்டுக்கு எடுத்துச்சென்றான்.

                                                    அடுத்த விடுமுறை நாள்.எப்படியும் அவளை சந்திக்க வேண்டும் என்ற துடிப்புடன் அந்த முகாமிற்குச் சென்றான். அன்று விடுமுறைநாள் என்பதால் அதிகளவான பார்வையாளர்கள் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். முகாமிற்கு பார்வையிட வந்திருப்பவர்கள் கேட்டுக்கொண்ட பெயர்களை சிலர் ஒலிபெருக்கியில் அறிவித்து வரவழைத்துக் கொண்டிருந்தார்கள். பெயரைக் கேட்டவர்கள் எல்லாம் ஓடோடிவந்து தம்மைப் பார்க்க வந்திருப்பவர்களுடன் கதைத்தார்கள். திவா என்ன பெயரைச்சொல்லி அவளை பார்வையாளர் இடத்திற்கு அழைக்க முடியும்?

                                                      திவாவிற்கோ பெரிய ஆற்றாமையாக இருந்தது. காவல்துறை அதிகாரியிடம் கதைத்து ஒருவாறு சந்திப்பு இடத்திற்குச் சென்றான். யாராவது தெரிந்தவர்கள் தென்படுகிறார்களா என்று தேடினான். சிலரிடம் அவளின் அடையாளத்தைச் சொல்லி விசாரித்தான். அப்படி யாரும் இல்லையே என்று அவர்கள் கைவிரித்தார்கள். அந்த முகாமில் இயங்கிய தற்காலிக மருத்துவமனைக்கு தகவல் சொல்லி, ஆளனுப்பினான். அங்கிருந்தும் அப்படி யாரும் இல்லையாம் என்ற பதில்தான் கிடைத்தது.
ஊரும் தெரியாது பேரும் தெரியாது. இப்படியே நின்று அவளை தேடிப்பார்ப்பது என்பது முட்டாள்வேலை என்பது புரிந்தது. களைப்போடு அவன் வீட்டிற்குத் திரும்பிவிட்டான்.

                                                                  அழுவது என்பது அவனுக்கு எப்போதுமே பிடிக்காத விடயம். பாடசாலையில்கூட ஒருமுறை ஆசிரியர் அடிக்க அடிக்க அழாமல்நின்று அடிவாங்கியவன் அவன் மட்டும்தான். அந்த அடிவிழுந்த தடத்தைப் பார்த்து அம்மாதான் அதிகம் அழுதார். அவன் எதற்கும் கிறுங்காதவன். அவன்தான் இப்போது தேம்பித் தேம்பி அழுதான். எனினும் அவனது மனது நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. தன்னுடைய தேடலில் அவளை கண்டடைவேன் என்று நம்பினான்.
ஆனால் அவளோ அவன் கண்ணில் படவேயில்லை.

'ஆண்டவனே நீர்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்' என்று இயலாமை கூடும்போது கடவுளிடம் மன்றாடுவான்.
அன்று அவனது வேலைத்தளம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அன்று அவனுக்கென ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கப்போகிறது என்பதை அவனேகூட எதிர்பார்க்கவில்லை. திவாவுடன் பணிபுரியும் அவனுடைய நண்பன் அவனைத் தேடிக்கொண்டு வந்தான்
                                                                                                                                                                                                                                                                                           'திவா'  'சொல்லு மச்சான்'
'இண்டைக்கு மெனிக்பாம் முகாமில மீற்றிங். போகப் போறம்.நீயா நானா? ரெண்டுபேரில ஒராள் போகலாம்.'
நண்பனுடைய வார்த்தை அவனுக்கு தேனாய் இனித்தது. ஏனென்றால் அவள் மெனிக்பாம் முகாமில்தானே இருக்கிறாள்.
'டேய் மச்சான் அந்த இடத்துக்கு நான் போறன்டா. நான் போறன். நான்தான் போகணும்' என்று திவா பரபரப்பானான்.
தன்னை விநோதமாகப் பார்த்த நண்பனின் பார்வையை திவா பொருட்படுத்தவில்லை.

'மாட்டன் எண்டாமல் என்ன விடடா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்' என்று சிறுபிள்ளையைப்;;;;;;போல துள்ளிக் குதித்தான்.
'சரிடா நீ போகலாம்.'
'ஐயோ...... தேங்க்ஸ்டா'
'ஆனால்......'
'என்னடா ஆனால்?'

'இல்ல அப்பிடி உனக்கு அவ்வ்வ்வளவுக்கு வேண்டியவர்கள் யார்டா இருக்கிறாங்க அங்க? சொல்லவே இல்லையே' என புருவம் உயர்;த்தி கிண்டலாகக் கேட்டான். பதிலுக்கு திவா எதையும் சொல்லாமல் சிரித்துவிட்டு தான் புறப்படவேண்டியதற்கான அலுவல்களைப் பார்க்கத் தொடங்கினான்.
    திவா பயணித்த வாகனம் வேகமாக மெனிக்பாம் முகாமிற்குச் சென்றுகொண்டிருந்தது. திவாவின் மனமோ வாகனத்தைவிட வேகமாக அவளிடம் பறந்துவிட்டிருந்தது.
                                                                 
                                             சடின் பிரேக்குடன் வாகனம் முகாமின் வாயிலில் நின்றது. அப்போதுதான் திவா அவளுடைய நினைவுகளிலிருந்து மீண்டான்.
சரியாக இரண்டு மணிக்கு ஒன்றுகூடல் ஆரம்பமாக இருந்தது. முகாமிற்குள் கால்வைத்தவுடனேயே திவாவின் கண்கள் அவளைத் தோடத் தொடங்கின. எல்லோரது முகத்தையும் பார்த்துப் பார்த்து ஏமாந்துபோனான்.
'அவளை இன்றைக்கு எப்படியாவது கண்டுபிடித்தே தீரவேண்டும்' என்று மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக்கொண்டிருந்தான்.
                                   அந்த முகாமின் முக்கியஸ்தர்கள், வைத்தியர்கள், இராணுவ அதிகாரிகள் என பலர் அந்த ஒன்றுகூடலில் கலந்திருந்தனர். அவளும் ஒரு வைத்தியராக, பழைய வைத்தியராக இங்கே வரமாட்டாளா என திவாவின் மனம் பதறியது.

                                            அந்த ஒன்று கூடலில் முக்கிய பிரதிநிதியாகத்தான் திவாவும் வந்திருக்கிறான். அவன் கதைக்க வேண்டிய விடயங்களை கதைத்துவிட்டு அமர்ந்திருந்தான். ஏனைய பிரச்சினைகள் கதைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. திவாவின் தொழில் அவனுக்கு மிகவும் பிடித்தமான தொழில்தான். ஆனாலும் இப்போது அது மிகப்பெரிய சுமையாகத் தெரிந்தது அவனுக்கு. எல்லோரும் எதை எதையோ கதைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் திவாவிற்கோ அவளின் நினைவுகளில் இருந்து விடுபடவே முடியவில்லை. கண்களை தூரத்தில் அலையவிட்டுவிட்டு, மனதை அவளின் நினைவுகளில் விட்டுவிட்டு அவன்மட்டும் மேடையில் குந்திக்கொண்டிருந்தான்.

                             திடீரெனதிவாவின் மூளையில் பொறி தட்டியது. கண்கள் தூரத்தில்செல்லும் அவளையே உற்றுநோக்கின. உதடுகள் மட்டும் மெலிதாய் அசைந்தன.
                                                                                  'ஐயோ அவள்தான். அவளேதான்.'
வெட்ட வெளியான முகாமில், தூரத்தில், மஞ்சள் நிறச்சட்டையுடன் அவள் போய்க்கொண்டிருப்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. தனது உடலைக்கூடக் கொண்டுநடக்கும் சக்தி அற்றவளாய்.... உயிருடன் நடமாடும் எலும்புக்கூடாய், குனிந்த தலை நிமிராமல், பதுமைபோல, எவரையும் கவனியாது போய்க்கொண்டே இருந்தாள்.

Friday, 7 February 2014

கருணைநதி நாவல் -பகுதி 3



 








 திவாவின் மனதை இனந்தெரியாத சுமையொன்று அழுத்திக்கொண்டிருந்தது.
நடுச்சாமத்தில் வானத்தில் கருமையான மழைமுகில்கள் அசைந்தன. அது கனவா நனவா என்று திவாவுக்கு இனங்காணத் தெரியவில்லை. திடீரென மழை கொட்டத் தொடங்கிவிட்டது. திவா தான் படுத்திருந்த பாயை வாரிக்கொண்டு கொட்டிலுக்குள் குனிந்தபடி நுழைந்தான். குனியாமல் அசண்டையீனமாகச்சென்று வாயில்தடியில் பல தடவைகள் தலையில் அடி வாங்கியிருக்கிறான்.

மின்சாரம் நின்றுபோயிருக்க வேண்டும். எங்கும் ஒரே இருளாக இருந்தது. அந்தக் கொட்டிலில் தங்கியிருந்தோர் எல்லோருமே அதற்குள் படுத்திருக்க முடியாது. ஆண்கள் எல்லோரும் பொதுவாக வெளியில்தான் உறங்குவார்கள். திடீரெனப் பெய்த மழையால் ஆளாலுக்கு ஓடிவந்து குடிசைக்குள் நின்றார்கள். எல்லோரும் படுக்க இடம்போதாது என்ற காரணத்தால் ஆங்காங்கே குந்திக் கொண்டார்கள். அக்கா சிறிய போத்தில் விளக்கொன்றை பற்றவைத்தார். அதன் சுவாலை ஒழுங்காக எரியாமல் காற்றில் ஆடியது. அதை அணையவிடாமல்அக்காவேதனகைகளால்மறைப்புப்பிடித்துக்கொண்டிருந்தார்.

வெளியில் காற்றுவேறு பலமாக வீசியது. ஒரு சுழல்காற்று அடித்தால் போதும் அந்தக் கொட்டிலும்கூட காற்றில் பறந்துவிடும்.
திடீரென, இருந்தவர்களெல்லாம் மாறி மாறி எழுந்தார்கள். வெளியில் பாய்ந்த வெள்ள நீரெல்லாம், உடைத்துக்கொண்டு குடிசைக்குள் வந்தது. முக்கியமான பொருட்களை எடுத்து நனையாமல் பாதுகாப்பாக உயரத்தில் வைத்தார்கள். அத்தானும் திவாவும் மண்ணை அணைத்து கொட்டிலுக்குள் வெள்ளம் வராமல் தடுத்தார்கள். எனினும் தொடர்ச்சியாகமழை கொட்டித்தள்ளியதால் வெள்ளம் அதிகரித்தது. களிமண்சேறு குடிசைக்குள் நிறைந்தது. குழந்தைகளையும் தூக்கி தோள்களில்போட்டுக்கொண்டார்கள். நித்திரைக் குழப்பத்தில் சிறுவர்களும் அழுதார்கள். அவர்களைச் சமாளிப்பதும் பெரும்பாடாகிப் போனது. அன்றைய இரவு முழுவதும்,உறக்கமில்லாத மழையுடனேயே கழிந்தது.

திவா வன்னியில் வாழ்ந்த நாட்களிலேயே மீள்குடியேற்ற அமைச்சின் செயலகத்தில் வேலை செய்தவன். இடப்பெயர்வுகள் காரணமாக அந்த அமைச்சுக்கும் அவனுக்குமான தொடர்புகள் அற்றுப்போயிருந்தன. தொடர்ந்தும் தனது கடமையைச் செய்ய அனுமதி தருமாறு முகாமிலிருந்தே மீள்குடியேற்ற அமைச்சுக்கு பல கடிதங்களை அனுப்பிக்கொண்டுதான் இருந்தான். அந்தக் கடிதங்கள் ஒன்றும் விழலுக்கிறைத்த நீராக ஆகிவிடவில்லை என்பதை அறிவிக்கும் முகமாக அவனுக்குப் பதில் கடிதம் வந்திருந்தது. விரைவில் அவனுக்கான கடமை இடத்தை தெரிவிப்பதாகவும் தொடர்ந்தும் அமைச்சின் பணியாளராக அவனால் செயற்பட முடியுமென்றும் அக்கடிதம் குறிப்பிட்டிருந்தது. அதன்பொருட்டு திவாவின் மனம் சற்று நிம்மதி பெற்றிருந்தது. ஆனாலும் அவளைவிட்டு விலகிப்போவதை நினைக்க நெஞ்சு வலித்தது.

'அவனது உயிர்வாழ்வின் முக்கியமான காலகட்டங்களில் எல்லாம் வந்துபோனவளின் முகத்தை இவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட்டேனா? பெயர்கூடத் தெரியாமல்...... அவள்கூடவா என்னை மறந்துவிட்டாள்?அவளேன் மறந்திருக்கவேண்டும். அவள் என்னை நினைவில் வைத்திருக்க அவளுக்காக நான் என்ன செய்தேன்? தனது சுயநலத்திற்காக அவளிடமிருந்த பொருளைக்கூட நான்தான் களவாக எடுத்துச் சென்றிருக்கிறேன்.'
                             அவனுடைய வெளி மனமும் உள்மனமும் வாதாடிக்கொள்ளத் தொடங்கிவிட்டன.அந்த நினைவுகள் தந்த வேதனையால் உடலும் மனதும் வலித்தது, வியர்த்துக்கொட்டியது. எப்போது இந்த நரகத்தை விட்டுத் தொலைவேன் என்றிருந்தவனுக்கு அவளைவிட்டுப் போவதை நினைக்க,முகாமைவிட்டு வெளியேறுவது என்பது பெரிய வேதனையாகத்தான் இருந்தது.

                                                  அவளேன் அப்படி இருக்கிறாள்? உயிரே மிச்சமென ஊசலாடிய வன்னியின் கடைசி நாட்களில்கூட சாவைச் சவாலாக்கி எறிகணை மழைக்குள்ளும் விழுந்தெழுந்து  நிதானமாகக் கடமை செய்தவள் அல்லவா அவள். அவளுக்கா இந்த நிலை? ஐயோ, எத்தனைபேரின் உயிர்களைக் காப்பாற்றி விட்டவள். அவள் சந்தோசமாக வாழவேண்டுமே...... என்றெல்லாம் திவாவின் மனம் அல்லாடிக்கொண்டு கிடந்தது. 
                         அப்போது முகாமின் கிராமசேவையாளரின் உதவியாளர் அங்கு வந்தார். வெளியில் சென்று வேலையை ஆரம்பிக்க அனுமதிகிடைத்த மீள்குடியேற்ற அமைச்சின் கடிதத்தை அவர்தான் திவாவிற்கு கொடுத்தார். அதில் அன்று பகல் பத்துமணிக்கு அவனை வவுனியா அலுவலகத்தில் சந்திக்குமாறு கோரப்பட்டிருந்தது.

                                                மின்னல் வேகத்தில் பொறிதட்டியது அவளின் நினைவு. அவனால் என்ன செய்யமுடியும் என்பது அவனுக்கே தெரியவில்லை. உடனடியாக அவன் வேலைக்குப் புறப்பட்டே ஆகவேண்டும். இந்த வாய்ப்பைக் கைவிட்டால் அவன் மிகப்பெரிய முட்டாள். யாரிடமும் தேடிச்சென்று விடைபெற்றுப்போக அவனுக்கு அவகாசமில்லை. அவனுடன் கூடத்தங்கியிருந்த, குடிசையில் வாழ்ந்தவர்களிடம் மட்டும் சொல்லிக்கொண்டு விடைபெற்றான்.
                                                  அவனது மனம் அவனிடம் இல்லை. அவன்தான் அந்த முகாமிலேயே தன் இதயத்தைத் தொலைத்து விட்டானே. எப்படி அவனால் நிம்மதியாக வெளியில் போக முடியும். மனது அங்கேயே நிற்க அவனது கால்கள் மட்டும் முகாமைவிட்டு வெளியேறின.


                                     திவா மீண்டும் வேலைக்குச்செல்ல ஆரம்பித்துவிட்டான். அவன் எப்போதும் தனது கடமைகளை சரிவரச்செய்யவேண்டும் என்று நினைப்பவன். அவனுடைய பத்து வயதிலேயே அவனுடைய தந்தை இறந்துவிட்டார். அம்மாதான் அவனையும் தங்கையையும் படிப்பித்து ஆளாக்கியவர். மரக்கறி வியாபாரம் செய்து கற்பித்தார். அதனாலோ என்னவோ அம்மாமீது உயிரையே வைத்திருந்தான் திவா. இப்போது அந்த அம்மாவும் தங்கையும் அவனுக்கு மீண்டும் கிடைத்துவிட்டார்கள். தங்கையின் மகள் பவிதாக்குட்டிகூட மீண்டும் அவனுக்குக் கிடைத்துவிட்டாள். ஆம் அவர்கள் வவுனியாவின் நகர்ப்புறக் கிராமமொன்றில் வாடகை வீடொன்றில் தற்காலிகமான வசிப்பிடத்தை அமைத்திருந்தார்கள். அது திவாவிற்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது.
எனினும் 'அவளது' களையிழந்த முகம் தண்ணீரில் தோன்றும் பிரதிபிம்பம்போல அடிக்கடி அவனது மனதில் தோன்றி அவனது நிம்மதியை விரட்டிக்கொண்டிருந்தது. அவள்பற்றிய இனம்புரியாத ஏக்கமும் தேடலும் அவனுக்குள்.
                          அந்த மென்மையானவளுடன், கருணையுள்ளம் கொண்டவளுடன் மனந்திறந்து கதைக்கவேண்டும். அவள் என்மடியில் முகம் புதைத்து தன் சோகங்களை எல்லாம் சொல்லி அழுது தீர்த்துவிட வேண்டும் என்று அவன் மனதில் தோன்றிய உணர்வுகளை நினைக்க அவனுக்கே ஒரு மாதிரியாக இருந்தது.

                                                           'நான் எதற்காக அவளைப்பற்றி இவ்வாறெல்லாம் நினைக்கின்றேன்? அவள்தான் என்னவளா? எனக்குக் கிடைப்பாளா? அவள் கறுப்புத்தான் என்றாலும் அதிலும் அழகானவளாகவே இருந்தாள். அவள் என் மனசுக்குள்ளேயே வாழ்கிறாள். கொஞ்சமும் விலகிவிடாமல் மனசோடு நிற்கிறாள் தன் சோகங்களைச் சுமந்தபடி.'

'                                                       அந்த லூசைப் போய்....' என்று எழுந்த மனச்சாட்சியை அதட்டி அடக்கினான்.

'அவளுக்கு எதற்காக லூசு?' என்ற கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டுப் பார்த்தான்.

'ஏனென்றால் அவள் அன்று உடுத்தியிருந்த உடை அப்படித்தான் இருந்தது. அவளின் முகத்தில் சோகம் அப்படி அப்பிக்கிடந்தது.'

                                                                                                  'சிலவேளை மாற்றுடை ஏதும் இல்லாமல் இருந்திருக்கலாம் இல்லையா?'

                         'ம். அவளுக்கு அன்றே உதவாமல் போனது நான் செய்த எவ்வளவு பெரிய தப்பு'

இவ்வாறெல்லாம் திவாவின் இதயம் அவள்பற்றிய சோகத்தால் பிழியப்பட்டது. எப்படிப்பட்ட அவள் இப்படியாகிவிட்டாளே என்ற ஏக்கம் அவனை பலமாக வாட்டியது. சதாகாலமும் அவள்தான் அவனது கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் நடமாடினாள்.-------- (தொடரும்)



மிதயாகானவி