Wednesday, 30 January 2013

பிரியமானவன்...............கவிதை

 உன்னுடன்..............



வாழ்ந்த நாட்கள்
கொஞ்சம்தான் - எனினும்
கோடி நாட்கள்
சுயநலமற்று
வாழ்ந்த சுகம்.
 
எப்படி மறப்பது
உன்னையும்
நீ அள்ளித் தந்த
பல வருட
ஆளுமை
அறிவையும்…….

நீ இப்போ என(ம)க்கு
இல்லையென்ற போது
நெஞ்சத்தின் தனிமை
நெருஞ்சி முள்ளாய்............
வலிக்கிறது இதயம்.

என் உயிரினும்
மேலானவனே,
உன் மூச்சுக்காற்றில்
வாழ்ந்தவர்கள் நாம்.
ஆனாலும்
உன் அந்த முடிவை
என்னால் நம்பவே
முடியவில்லை.

அந்த ஓர் நிமிடத்தில்
எ(ம்)ன் இதயமே
துடிப்பிழந்து போனது.
எ(ம்)மை
தவிக்கவிட்டுச் சென்றதெங்கே…..?

என்னவனே
உறவைப்பிரிந்து,
உணவை ஒறுத்து,
உறக்கத்தை தொலைத்து,
உன்னையே நம்பிய
எம்மை
இன்னும்
என்ன செய்யப்போகிறாய்.

இனியவனே,
யார் யாரோ
உன்னைத்
தூற்றுகிறார்கள்.
அறியாதவர்கள்
அலம்புகிறார்கள்.
நானோ இப்பவும்
உன்னை
விசுவாசமாய்
காதலிக்கிறேன்.
பிரிவின்போது தான்
அதிகம் தெரிகிறது
சுதந்திரம் பறிபோனதன்
வலியின் கொடூரம்.

நீ அழகானவன்.
பெரும் ஆளுமையானவன்.
அட்டவதானியும் கூட.
ஆனால்
அகங்காரமற்றவன்.
இரக்கமானவன் - ஆனாலும்
எம் கண்ணில்
இரத்தம் கொப்பளிக்கவிட்டுவிட்டு
எங்கே சென்றாய்
அன்பே………….?

காலத்தின் தேவையால்
காணாமல் போனாயா?
நீ இல்லையேல் - இனி
எம் வாழ்வில்
மழையே இல்லையென
தடம் புரள்கிறது –
நிஜமான  நினைவுகள்
நெஞ்சக்கூட்டை
பலமாக அழுத்துகின்றன…………

ஆனாலும்
நீ உயிருடன்
இருக்கிறாய் என்ற
ஒற்றைச் சொல்லுக்காய்
காத்திருக்கிறேன்
கைகளில் விலங்கிடப்பட்டு................

 உன் பிரியமானவள்
 - மருத்துவமனை நிலா .நன்றி2010 ஈழநேசன் இணையத்தில் வெளிவந்த என் கவிதை

Tuesday, 29 January 2013

மெழுகிமுடிந்த வர்ணங்கள்.........கவிதை


வெறும்
வர்ணங்களால்
வடுக்கள் மறைந்து
போவதில்லை

...
காயப்பட்ட
சொந்தமெல்லாம்
கதறி கதறி வந்த

நாட்களில்
நானும்
காயத்துடன் கிடந்தேன்
வயிறு பிழந்து
வலிகளுடன;
...................................
அனாதரவானர்கள்
வீதிகளில்....

இன்று
வர்ணங்களால்
மறைக்கப்பட்ட
என் சுவர்களின்
வெடிப்புக்களிலிருந்து

என் ஆத்மா
அழுகிறது
நான் எல்லாம் ஓர்
வைத்தியசாலையா?
என



என்னால் கைவிடப்பட்டு
இறந்து போன உயிர்களின்
மனச்சாட்சிகுள்
இறந்து கொண்டிருக்கறேன்
.தினமும்See

.

Friday, 25 January 2013

துருப்பிடித்த காதல்


நீ வாழ்வின்
வாசலில்
நுழையும் போது
நான்
மரணத்தின் பிடியில்
தள்ளப்படுவேன்


உன்
உபசரிப்பு வைப்பகத்தில்
நான்
ஏகாந்தத்தில் நுழைந்து
துருப்பிடித்த என்
இதயத்தில் காதல்
சிலையொன்றை
நிறுவி பூசிப்பேன்

காதலை திராட்சை
மதுவைப்போல்
குடிப்பேன்

அது என்னை
பாலைவனத்திற்கு
அழைத்துசென்று
மேகங்கள்
வானில்
நீந்துவதைக்காட்டும்

இரவு இரத்தில்
காதல்
பட்டுப்போன்ற
உதடுகளால்
ஒரு நீண்ட
ஆழ்ந்த தவிக்கும்
முத்தத்தை என் மீது
பதித்து விட்டு
தன் வலிய கரத்தால்
அறைந்து விடுகிறது

நீண்ட போரின்
பின்னரான
அமைதி
மண்டையோடுகளையும்
எலும்புகளையும் விட்டு
செல்லவதைப்போல்

இருந்தும்
 துன்ப உயிர்
தனிமையில் ஆறுதல்
கொள்ளவதெல்லாம்
துருப் பிடித்த
காதலில் தான் ................

Saturday, 19 January 2013

குங்கும கேள்வி.............

அவள் ஏறியிறங்கிய
ஜ.சி.ஆர்.சி களும்
மனித உரிமைகளும்
ஏன் சாமிகளும் கூட
கைவிரித்து நிற்கஇப்போ
நெற் கபேகளில்
சனல்4 லிலும்
வீடியோக்களிலும்
தேடிக்கொண்டிருக்கிறாள் தன்
குங்கும கேள்வியை,

ஒவ்வொரு விடிலிலும்
இதயத்தில் இடியாய்
இறங்கும் உணர்வுகள்
கண்கள் பனிக்க
மனம் தடுமாற
சுட்டுவிரலை
வலிந்து பிடித்து
பொட்டிடுகிறாள்
நெற்றியில்,

அவள் இதயத்தின்
அவலத்துடிப்பு
யாருக்கும் புரியாது
அவள்தகிப்பு
கணாமல் போனா
கணவனுடன்
அவள்பொட்டும்
ஏன்
மனைவியின் சிரிப்பும் கூட
காணமலே போகவேனுமாம்
சமுகத்தின் கோட்பாடாம்,

எவரும்திணிக்காத
சுகந்திர உணர்வு
எம்மைபோல்

அவளிலும் வழிகிறது
வெறும் நம்பிக்கையின்
காத்திருப்புக்களோடு

Thursday, 17 January 2013

பனித்துளி
என்
ஆசைக் காதலனே
ஒளி வர
... நீ மட்டும் போவாய்
அப்போ
நான் மீண்டும்
தனித்துப் போகிறேன்
ஆற்றங்கரை நானலாய்
மரங்களின் அழகு
நிலாவொளி
ஆழ்ந்த அமைதி
அருவருப்பும்
பயங்கரமும் தந்தன
நீயில்லாத தனிமையில்
நீயில்லாத பொழுது
மழைத்துளி எனனை
ஆக்கிரமிக்கின்றது
அதிகாரத்துடன்

உன.
வரவுக்காய்
ஏங்கும் நாட்கள்
ரணங்களாய் விடிகின்றன
என் மேல்
காதல் கொண்ட
பனித்துளியே
காத்திருக்கின்றேன்
தனி நானலாயே............

Wednesday, 16 January 2013

வலி..........

கட்டுதறிகள் மட்டும்
காத்தித்துகிடக்கின்றன 
போர்பறித்து சென்ற 
வெள்ளச்சி பரம்பரையின் 
வரவுக்காய்........


சூரிய பெண்னே!

சூரிய பெண்னே!
உஜ்

மெதுவாகய் மெதுவாய்- உன்
கூரிய கதிர்களை விதைத்திடு
போரின் பற்களால் 
கடித்து குதறப்பட்ட
எம் தேசத்தில்
குழந்தைகள் கூட
பாதணியற்று நடக்கின்றார்கள்

தைத்திரு நாளே
மன்னித்து விடு
புதுப்பானையெடுத்து
பொங்கலிட முடியல்ல-
இன்னும் நானொ் அகதி

சூரிய உதயம் கானாத
காலைப் பொழுதொன்றில்
ஊா் இழந்தோம்
நாடு மீண்டதாம் -இன்று
நாம்மட்டும் மீளவில்லை

பற்றை மேவிய- எம்
வெற்று நிலம் போல்-எம்
கைகளும் வெறுமையே -இருந்தும்
படையல் செய்கிறோம் -

எப்போதும் வரற்றாத- எம்
கண்ணீரைப்போல
நம்பிகையின் காத்திருப்புக்கள் - எம்மில்
வழிந்துகொண்டிருப்பதால்