Sunday, 23 June 2013

நினைவுத் தூறல்..


குட்டிச் செல்வங்களே-உம்
நினைவு வலிக்கிறது
அள்ளி அணைத்து-முத்தமிட
என் நெஞ்சு துடிக்கிறது

உலா வரும் நிலாவினை
உவகையுடன் காட்டி
குலாவியே உணவை தந்து
குதுகலிக்க நான் -இல்லை
நீள்தொலைவில்
வெண்பனிப் போர்வையுடன்..........

.எங்கோ ஒா் மூலையில்
தூக்கணங் குருவிக்கூட்டின்
தும்புகளில் நான்..............

பாதியிரவில் உம்
தூக்கத்தை குழப்பி
பார்த்து விட்டு
அவசரமாய் ஓடுகின்றேன்
மிகுதி வேலைக்காய்.....

பிஞ்சுப் பிரபஞ்சங்களாய்-தினம்
என்னையே சுற்றிவரும்
அன்புக்குழந்தைகளே-உங்களை
ஆரத்தழுவுகின்றேன்

காலத்தடுமாற்றம் நாம்
வாழ்ந்த நிலை என்ன
வாழும் நிலை என்ன
வலிக்கிறது உள்ளம்

ஆசைச் செல்வங்களே
ஆழ வேண்டாம்
பாச நெஞ்சத்துடன்
பாக்குவமாய் இருங்கள்

நாளை நாம்
ஒன்றாவோம்
மலரின் மலர்ச்சிக்காய்
புன்னகைப்போம்..............மிதயா  கானவி...

1 comment:

  1. காலத்தடுமாற்றம் நாம்
    வாழ்ந்த நிலை என்ன
    வாழும் நிலை என்ன
    வலிக்கிறது உள்ளம்

    Vetha.Elangathilakam.

    ReplyDelete