குட்டிச் செல்வங்களே-உம்
நினைவு வலிக்கிறது
அள்ளி அணைத்து-முத்தமிட
என் நெஞ்சு துடிக்கிறது
உலா வரும் நிலாவினை
உவகையுடன் காட்டி
குலாவியே உணவை தந்து
குதுகலிக்க நான் -இல்லை
நீள்தொலைவில்
வெண்பனிப் போர்வையுடன்..........
.எங்கோ ஒா் மூலையில்
தூக்கணங் குருவிக்கூட்டின்
தும்புகளில் நான்..............
பாதியிரவில் உம்
தூக்கத்தை குழப்பி
பார்த்து விட்டு
அவசரமாய் ஓடுகின்றேன்
மிகுதி வேலைக்காய்.....
பிஞ்சுப் பிரபஞ்சங்களாய்-தினம்
என்னையே சுற்றிவரும்
அன்புக்குழந்தைகளே-உங்களை
ஆரத்தழுவுகின்றேன்
காலத்தடுமாற்றம் நாம்
வாழ்ந்த நிலை என்ன
வாழும் நிலை என்ன
வலிக்கிறது உள்ளம்
ஆசைச் செல்வங்களே
ஆழ வேண்டாம்
பாச நெஞ்சத்துடன்
பாக்குவமாய் இருங்கள்
நாளை நாம்
ஒன்றாவோம்
மலரின் மலர்ச்சிக்காய்
புன்னகைப்போம்.............

காலத்தடுமாற்றம் நாம்
ReplyDeleteவாழ்ந்த நிலை என்ன
வாழும் நிலை என்ன
வலிக்கிறது உள்ளம்
Vetha.Elangathilakam.