Sunday, 23 June 2013

எமக்காக ஒரு விடியல் வரும்...

என் இரவை நிறைக்கிறது
உன் கனவுகள்
என்னை சுற்றி காற்றில் அலைகிறது
உன் காதலின் செய்தி
உன் பாடலின் இசையாய் வழிகிறேன்
உன் சொற்களில் என்னை நிரப்பியிருக்கிறாய்
அந்த அன்பின் வார்த்தைகள்
என்னை அள்ளிப்போகிறது
ஆயினும் அன்பே............................

தனிமை கொடியது
என்னையும் உன்னையும்
நம் வாழ்வையும்
சுட்டெரித்து விடும்

ஒரு விடியலில்
நான் உன்னிடம்
வருவேன்

காரிருளில் உன்
மடி மீது முகம்புதைக்க
கவலை மறந்து
உன் மார்வில்
சாய்ந்து கொள்ள
யாரும் கண்டறியா
உன் அன்பில் இணைந்திட
நான் வருவேன்
உன்னிடம்


---------- மிதாயா கானவி

No comments:

Post a Comment