Saturday, 22 June 2013

கவிதை

இலக்கியத்  தோழன்...
.....................................


எனக்கொரு இலக்கிய
தோழன்
அவன் எழுத்தைப்
போலவே அவனிலும்
எழிமையே.............

அலகாரமில்ல அவன்
வதனம் போலவே
அகமும் அப்பிக்
கிடந்தது எப்போதும்

சின்னஞ் சிறிய
இருபபிடத்தில்
சிதறியே கிடந்த அவன்
பாவனைப் பொருட்கள்
சொல்லி நின்றன
அவன் தனிமையின்
வருடல்களை

வாழ்வை திண்டுகொண்டிருந்த
துயரில்லிருந்து மீண்டுகொண்டிருந்தான்
மெதுவாக.................

வெறித்த அவன் விழிப்பார்வை
பரந்து கிடந்த கடலலையில்
மோதி பிரகாசமாய்
ஒளிர்ந்து கொண்டேயிருந்தது..

No comments:

Post a Comment