Sunday, 23 June 2013
இறந்துபோனநாளொன்று............
படித்ததில்பிடித்த-உன்
வரிகள்உன்னைப்
படித்தபின்
அடங்கி போயிற்று
இராப்பறவையின்
அவலக்குரலாய்
எனை
இனம்காணத்தவறிய
உன்விழிகள்
எமக்கான
உறவின்விரிசல்களை
மௌனங்களாக்கின
வெற்றுவார்த்தைகளின்
சத்தமற்றஒலிகள்
சலசலக்கும்ஓடைகளின்
ஓரங்களில்
செத்தபாசிச்செடிகளாய்
நாறும்கழிவுகளாய்
இறந்தநாளொன்றின்
முடிவில்கரையொதுங்குகின
உனைதொலைத்து
விட
திராணியற்று
என்னுள்கரைகிறது
நீண்டுதொங்கும்
இரவுகளின்வெம்மை
நெஞ்சுமையத்தில்
வெறுமையாய்............
தேய்ந்துகொண்டிருந்த
நினைவுகளை
தூசுதட்டி
மீளவும்
துடைத்துப்பார்க்கின்றேன்
நீயில்லாமல்போன
என்னைபோலவே
அதுவும்.........
நிகழ்தகவுகளே
நிகழ்வுகள்ஆனதால்
உண்மைகளைநியாயப்படுத்த
முடியாதவளாகி-உன்
பார்வைகளைதற்செயலாக்கி
நகரும்நாட்கள்
சொல்லிசெல்லும்
இறந்துபோன
நாளொன்றின்இயலாமைகளை...
...........மிதயா கானவி....................
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment