அன்பை எழுதுதல் -----------
காலத்தின் தேவையொன்றை நிறைவேற்றியிருக்கிறார் கானவி.அவரது நாவலை எழுத்துபிரதியாக படித்து முடித்தபோது என்னுள் எழுந்த கருத்து அது.
பெரும் துயர் சுமந்த வரலாற்றை கொண்டிருக்கிறது தமிழினம்
நீண்ட பெரும் போரில் நிகழ்ந்த அவலங்கள் நிச்சயம் பதிவுசெய்யப்பட வேண்டும் .இலக்கிய பதிவென்பது அந் நிகழ்வுகளை உணர்வுத் தளங்களில் நின்று பதிவுசெய்வது. அந்த வகையில் கானவி அவர்களின் கருணை நதி முள்ளி வாய்க்காலில் தமிழர் எதிர்நோக்கிய நெருக்கடியான வாழ்வு சூழலை பதிவு செய்கிறது.
போர் சூழலில் நின்று மக்கள் துயர்துடைத்த மருத்தவ பணியாளர்களின் கருணை போற்றுதற்குரியது அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்.
இந்த வகையில் முள்ளிவாய்க்கால் மக்களின் பேரவலமும் மருத்துவ பணியாளர்களது அர்ப்பணிப்பான சேவையும் இவரது குறு நாவலில் பதிவுசெய்யப்படுகிறது
உண்மையாக காதலின் ஏக்கமும் தேடலுமே கதையின் கருவென விரிந்தாலும் மருத்துவ பணியின் மனித நேய அணுகுமுறை
கருணை நதியாக கதையெங்கும் பரவுகிறது்
இவர் மருத்துவ பணி புரிபவர் என்பதால் அவரது சொந்த அனுபவங்கள் கதையின் யதார்த்தத்தை அதிகரித்திருக்கிறது..
எழுத்துலகிற்கு புதுதியவராக இருந்தாலும் எடுத்துகொண்ட கதைக்களம் ஆவணப்படுத்த வேண்டியதாகவும்
மீள வாசிக்கப்பட வேண்டியதாகவும் அமைகிறது இதுவே நாவலின் வெற்றியை தீர்மானிக்கிறதென்றும் கூறலாம் .
ஓய்வு நேரம் அதிகம் கிடைக்காத பணியொன்றில் இருந்தாலம் .தமிழ் இலக்கியத்தில் கொண்ட விருப்பால் இந்நாவலை தந்த கானவி பாராட்டுக்குரியவர் . இளையவர் என்பதால் இன்னும் பல வீச்சான படைப்புக்களை இலக்கிய உலகம் இவரிடமிருந்து எதிர்பார்க்கிறது
சுருங்க சொன்னால் கானவி அன்பை எழுதியிருக்கிறார் வாழ்த்துக்கள்.
க.சோதிதாசன் (வேலணையூர்-தாஸ்)
தலைவர்
யாழ் இலக்கியக்குவியம்
இல 37 2ம் குறுக்குத்தெரு கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்.
என் எண்ணங்களின் சாகாவரம்
கிளிநொச்சியிலிருந்து ஒவ்வொரு ஊராக இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இறுதியாக எஞ்சியிருந்த வட்டுவாகல் பகுதிக்கு திவாவும் வந்திருந்தான். அந்த இடப்பெயர்வின்போது மக்கள்பட்ட அவலத்திற்கு அளவிடையே கிடையாது. அந்த வலிகள் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் பேரலைகளாகப் பொங்கி குமுறிக்கொண்டேயிருந்தன.
எப்படியாவது திரும்பவும் தங்கள் ஊருக்குப்போகவேண்டும் என்ற வன்னிமாந்தர்களது ஏக்கமும் ஆவலும் திவாவிற்குள்ளும் இருந்தது. வன்னிப்போரின் இறுதி நாட்களில் எல்லோரிடமும் இருந்த நம்பிக்கை பனித்துளிபோல நெஞ்சைவிட்டு காயத்தொடங்கிவிட்டது.
17.05.2009 அன்று வன்னியில் கடைசிவரை இருந்து இடம்பெயர்ந்த பல இலட்சம் மக்களில் திவாவும் ஒருவனாக வவுனியாவின் புனர்வாழ்வு முகாம் ஒன்றில் தஞ்சமடைந்தான்.
அந்தமுகாமில் வசித்தவர்களில் அவனுக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இருக்கவில்லை. உறவுகள் யாருமற்ற தனிமை அவனை வாட்டியது. வன்னியில் காயமடைந்து நொந்துபோயிருந்த அவனுக்கு ஆறுதலளிக்க தாய்மடியைத் தேடியது மனம். ஆனால் அவனுக்கு எந்த உறவினரதும் தொடர்புகூடக் கிடைக்கவில்லை.
பட்டி மாடுகளைப்போல பல ஆயிரக்கணக்கான மக்களை ஒரே இடத்தில் அடைத்து வைத்திருந்தது அரசு. எங்கட ஊரில மாடுகளுக்குக்கூட அத்துப்படியான சுதந்திரம் இருந்தது என்று நினைக்க அவனுக்கு மனத்தில் எரிச்சலாய் எரிந்தது.
அந்த முகாமைச்சுற்றி பலமான முட்கம்பி வேலிகள். அதனை அண்மித்து இராணுவக் காவலரண்கள். எல்லாமே புதிய சூழலாக இருந்தமையால் அது மக்களை அச்சப்படவைத்துக்கொண்டிருந்தது. அவனும் படையினரின் ஒவ்வொரு பதிவு நடவடிக்கைகளின் போதும் புலனாய்வாளர்களாம் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்களின் வருகையின்போதும் அச்சமும் நிம்மதியின்மையுமாகத்தான் இருந்தான். ஏனெனில் போராளியாக இருந்து தடுப்பு முகாம்களுக்குப் போகாமல் முகாம்களில் இருந்தவர்களையும் போராளிகளாக இருந்திருக்கக்கூடும் என்று சந்தேகப்படுபவர்களையும் படையினர் அங்கிருந்து அழைத்துச்சென்றுகொண்டிருந்தார்கள். அப்படி அழைத்துச் செல்பவர்களில் பலர் போராளிகளுக்கான தடுப்பு முகாம்களில் விடப்பட்டார்கள். சிலர் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். சிலர் சிலரின் மனிதாபிமானச் செயற்பாடுகளால் (லஞ்சம் வாங்கியபின்) அவர்களது பெற்றோரிடம் சென்றும் சேர்ந்தார்கள். சிலர் காணாமலும் போய்விட்டார்கள்.
யுத்தத்தின் இறுதி நாட்களில் வன்னியில் சத்துள்ள உணவின்றித்தான் உயிர்வாழ்ந்தனர் மக்கள். பல உடைமைகளையும் உயிர்களையும் பறிகொடுத்திருந்தனர். அந்த அவலங்களையெல்லாம் நெஞ்சில் பெரும் தீப்பிழம்பாகச் சுமந்துகொண்டு எஞ்சிய உயிர்களுடன் மட்டும் வவுனியாவில் தஞ்சமடைந்திருந்தனர் அந்த மக்கள். பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பதைப்போல அந்தச் சனங்களுக்கு முகாமிலும் பல தொற்றுநோய்களும் தொற்றித் தொற்றித் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தன.
அவர்களால் என்னசெய்யமுடியும்? அந்த முகாமிலும் உரியமருத்துவ வசதி இருக்கவில்லை. அங்கிருந்தவர்கள் எவரும் மேலதிக சிகிச்சைக்காக வெளியில் சென்றுவரவும் அப்போது அனுமதிக்கப்படவில்லை. வன்னியில் நடந்த அந்தக் கொடூரப் போரிலே உயிர் தப்பியவர்கள் பலர் அந்த முகாமில் நோய்வாய்ப்பட்டும் இறந்தனர். அந்தக் கொடுமையான காட்சிகளை கண்ணூடாகக்கண்ட திவா வெதும்பிப் போனான்.
புதிதாகக் காடு வெட்டப்பட்டிருந்த கரடுமுரடான நிலத்தில் அந்த முகாம் அமைந்திருந்தது. காட்டு மரங்கள் ஒன்றுகூட இல்லாமல் வெட்டை வெளியாக்கப்பட்ட இடத்தில்தான் தறப்பாள் கொட்டில்கள் நிரம்பி வழிந்தன. கொழுத்தி எரிக்கும் வெய்யிலில் முழத்துக்கு முழம் தறப்பாள் கொட்டில்கள். இருப்பிடங்களிற்கு அருகாமையிலேயே மலசல கூடங்கள், குடிநீர்த்தாங்கிகள், சமையல்கூடங்கள். மொத்தத்தில் எல்லாமே அங்கு சுகாதாரத்திற்கு மாறாகவே அமைந்திருந்தன.
ஒரேயொரு தறப்பாள் கொட்டிலில் பத்துப்பேர் இருக்க வேண்டும். சிறிய குடும்பமாக இருந்தால் ஒரே கொட்டிலில் மூன்று நான்கு குடும்பங்களும் இருக்க வேண்டும்.
திவாவும் தெரிந்த ஒரு குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டான். அந்தக் குடும்பத்தில் அப்பா, அம்மா, அக்கா, அத்தான், அவர்களின் பிள்ளைகள் இருவர், தம்பி, இரண்டு இளம் பெண்கள் ஆகியோருடன் வயதான மூதாட்டி ஒருவரும் இருந்தார்.
திவாவிற்கு அது எப்போதுமே பழக்கப்படாத வாழ்க்கை. பெண் பிள்ளைகளுடன் அதுவும் முன்பின் அறிமுகமே இல்லாதவர்களுடன் ஒரே கொட்டிலில் இருப்பது பலவகையில் மனச்சங்கடமாகவே இருந்தது. அங்கு யாருக்கும் படுத்துறங்குவதற்கு தனியான மறைவிடம் எதுவும் இருக்கவில்லை. உடை மாற்றக்கூட மிகவும் சிரமப்படுவார்கள்.
திவா ஒரு தங்கையுடன் கூடப்பிறந்தவன்தான். எனினும் வீட்டில் இவ்வாறான சிக்கல் அவனுக்கு ஏற்பட்டதே இல்லை. அங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகக் கழிவதுபோல இருந்தது.
உறவினர்கள் வெளிநாடுகளில் இருப்பவர்களின் கைகளில் பணம் புழங்கியது. கூட்டுக்குடும்பங்களாக வன்னிமண்ணில் விவசாயம் செய்து சீரும் சிறப்புமாக வாழ்;ந்த பலர் மீளமுடியாமல் தவித்தார்கள்.
முகாமில் பலநூறு பேருக்கு ஒன்றாகச் சமைக்கும் உணவில் சுவையே இருக்கவில்லை. பசிக்காக மட்டுமே சாப்பிடவேண்டியதாய் இருந்தது. சமையல் செய்வது, அதைப் பங்கிடுவது எல்லாமே மக்களால்தான் செய்யப்பட்டது. அதனை படையினர் மேற்பார்வை செய்தார்கள். திவா இருந்த கொட்டிலில் இரண்டு குட்டிப்பையன்களும் இருந்தார்கள்.
'அம்மா எனக்கு சாப்பாடு வேணாம் எண்டால் வேணாம்தான்.'
'இது என்ன ஒவ்வொருநாளும் கடலை? எனக்கு இடியப்பம்தான் அவிச்சுத்தா'
'அம்;மா இண்டைக்கு குழல்பிட்டு அவி'
என்றெல்லாம் அந்த வாண்டுப்பையன்கள் முகாம் உணவை வெறுத்தொதுக்கினார்கள். அந்தத் தாயாரால் அப்போதைக்கு செய்துகொடுக்க முடியாத உணவுகளையே விரும்பிக் கேட்பார்கள். அப்போதெல்லாம் அந்தத் தாயாரின் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும். அந்தத் தாய் இவ்வாறான உணவுகளை தயாரிக்க எங்கேபோவாள்? அவற்றை செய்துகொடுப்பதற்குப் பணம் வேண்டுமே. வன்னியில் இறுதிநாள்வரை பொத்திப் பொத்தி வைத்திருந்து கொண்டுவந்த சொற்ப பணமும் செலவாகிவிட்டது. இவ்வாறுதான் பல்லாயிரங் குடும்பங்களின் வாழ்க்கையும் விரக்தியோடும் ஏக்கத்தோடும் விருப்பமின்றியும் கழிந்துபோய்க்கொண்டிருந்தன.
அந்தந்த நேரத்திற்கு உணவுத்தட்டுகளுடன் வரிசையில் கையேந்தி நிற்கவேண்டும். அங்கு வந்த புதிதில் இரண்டொருநாட்கள் அவனை நித்திரை வாட்டி வதைத்தது. அதை நித்திரை என்பதா முழு மயக்கம் என்பதா தெரியவில்லை. உரிய நேரத்திற்கு வரிசைக்குப் போகாததால் திவா சாப்பாடில்லாமலும் இருந்திருக்கிறான். அவ்வாறான சமயங்களில் அவன் அவமானத்தால் தலைகுனிந்து அழுவான். அடிமைபோல வாழ்வதைவிட வன்னியிலேயே செத்திருக்கலாம் என அவனது மனம் அங்கலாய்க்கும்.
திவா தனக்கு வயதுவந்த நாளிலிருந்தே எதற்காகவும் யாரையும் எதிர்பார்க்காதவன். கௌரவமாக உழைத்து, இருப்பதை வைத்து சமாளித்து, நாலுபேர் மதிக்க வாழவேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவன். இப்போது கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழியே வேப்பங்காயாய் மனசில் கசந்தது. படித்தென்ன பட்டம் பெற்றென்ன? பண்பிருந்தென்ன பணமிருந்துதான் என்ன? அடிமையாகவேதான் வாழ்கின்றோம் என்றெல்லாம் அவனது மனம் கசப்பாய்க் கசந்தது.
இதுகூட நான் எனது குடும்பம் என்று வாழ்ந்ததற்காக இறைவன் தந்த தண்டனைதான் என நினைத்து நொந்து கொண்டான்.
நாம் எல்லோருமே ஒன்றுசேர்ந்து உழைத்திருந்தால்...............? என்று அவனது மனச்சாட்சி அவனுடன் வாதாடும். உண்மை உறைக்கும். எனினும் காலங்கடந்த அந்த ஞானத்தால் பயனென்ன? திவா தன்னைப்போலவே முடிந்துவிட்ட செயல்களாலும் முடியாத நினைவுகளாலும் திண்டாடிக் கொண்டிருந்த பலரைப்போல தறப்பாள் கொட்டிலுக்குள் சோர்ந்துபோய்க் கிடந்தான். அவனுடைய உணர்வுகள்கூட அவனுக்குள் மனப்போராட்டத்தையும் இயலாமையையும்தான் கிளப்பிக்கொண்டிருந்தன. எந்தவேலையுமின்றி கிடந்தாலும்கூட அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. உறக்கம்கூட இரக்கமில்லாத கனவுகளால் கிழித்தெறிaப்பட்டன. -............இன்னும்வரும்
காலத்தின் தேவையொன்றை நிறைவேற்றியிருக்கிறார் கானவி.அவரது நாவலை எழுத்துபிரதியாக படித்து முடித்தபோது என்னுள் எழுந்த கருத்து அது.
பெரும் துயர் சுமந்த வரலாற்றை கொண்டிருக்கிறது தமிழினம்
நீண்ட பெரும் போரில் நிகழ்ந்த அவலங்கள் நிச்சயம் பதிவுசெய்யப்பட வேண்டும் .இலக்கிய பதிவென்பது அந் நிகழ்வுகளை உணர்வுத் தளங்களில் நின்று பதிவுசெய்வது. அந்த வகையில் கானவி அவர்களின் கருணை நதி முள்ளி வாய்க்காலில் தமிழர் எதிர்நோக்கிய நெருக்கடியான வாழ்வு சூழலை பதிவு செய்கிறது.
போர் சூழலில் நின்று மக்கள் துயர்துடைத்த மருத்தவ பணியாளர்களின் கருணை போற்றுதற்குரியது அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்.
இந்த வகையில் முள்ளிவாய்க்கால் மக்களின் பேரவலமும் மருத்துவ பணியாளர்களது அர்ப்பணிப்பான சேவையும் இவரது குறு நாவலில் பதிவுசெய்யப்படுகிறது
உண்மையாக காதலின் ஏக்கமும் தேடலுமே கதையின் கருவென விரிந்தாலும் மருத்துவ பணியின் மனித நேய அணுகுமுறை
கருணை நதியாக கதையெங்கும் பரவுகிறது்
இவர் மருத்துவ பணி புரிபவர் என்பதால் அவரது சொந்த அனுபவங்கள் கதையின் யதார்த்தத்தை அதிகரித்திருக்கிறது..
எழுத்துலகிற்கு புதுதியவராக இருந்தாலும் எடுத்துகொண்ட கதைக்களம் ஆவணப்படுத்த வேண்டியதாகவும்
மீள வாசிக்கப்பட வேண்டியதாகவும் அமைகிறது இதுவே நாவலின் வெற்றியை தீர்மானிக்கிறதென்றும் கூறலாம் .
ஓய்வு நேரம் அதிகம் கிடைக்காத பணியொன்றில் இருந்தாலம் .தமிழ் இலக்கியத்தில் கொண்ட விருப்பால் இந்நாவலை தந்த கானவி பாராட்டுக்குரியவர் . இளையவர் என்பதால் இன்னும் பல வீச்சான படைப்புக்களை இலக்கிய உலகம் இவரிடமிருந்து எதிர்பார்க்கிறது
சுருங்க சொன்னால் கானவி அன்பை எழுதியிருக்கிறார் வாழ்த்துக்கள்.
க.சோதிதாசன் (வேலணையூர்-தாஸ்)
தலைவர்
யாழ் இலக்கியக்குவியம்
இல 37 2ம் குறுக்குத்தெரு கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்.
என் எண்ணங்களின் சாகாவரம்
கருணை நதி எனும் எனதுமுதலாவது நாவலைவெளியீடுவதில் மகிழ்வடைகின்றேன்.2005 இல் மருத்துவ மடியில் என்னும் சிறுகதை தொகுதியையும் தந்திருந்தேன்.
எனது வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்கள் வித்தியாசமானவை கடந்துவந்தபாதைமேடு பள்ளங்களுடன் முட்கள் பரப்பியதாய் இருந்தது.
எனது நீண்ட காலமருத்துவபணியில் நான் பெற்ற அனுபவங்கள் பல ஆயிரம்.அவற்றின் சில துளிகளின் வெளிப்பாடகவே கருணை நதி கருக்கொண்டது என் எண்ணக்குழந்தைகள் செழித்துவளர
உரமிட்டுக்கொண்டிருக்கும்முகமறி யா என் நட்பு உள்ளங்கள் அணைவருக்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகள்
என் நீண்ட இலக்கிய பயணத்திற்கு வாசகர்களாகிய உங்களின் கருத்துக்கள்தான் வலுச்சேர்க்கும்.உங்கள் கருத்துகளை சொல்லமறவாதிர்கள்
எனது வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்கள் வித்தியாசமானவை கடந்துவந்தபாதைமேடு பள்ளங்களுடன் முட்கள் பரப்பியதாய் இருந்தது.
எனது நீண்ட காலமருத்துவபணியில் நான் பெற்ற அனுபவங்கள் பல ஆயிரம்.அவற்றின் சில துளிகளின் வெளிப்பாடகவே கருணை நதி கருக்கொண்டது என் எண்ணக்குழந்தைகள் செழித்துவளர
உரமிட்டுக்கொண்டிருக்கும்முகமறி
என் நீண்ட இலக்கிய பயணத்திற்கு வாசகர்களாகிய உங்களின் கருத்துக்கள்தான் வலுச்சேர்க்கும்.உங்கள் கருத்துகளை சொல்லமறவாதிர்கள்
கிளிநொச்சியிலிருந்து ஒவ்வொரு ஊராக இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இறுதியாக எஞ்சியிருந்த வட்டுவாகல் பகுதிக்கு திவாவும் வந்திருந்தான். அந்த இடப்பெயர்வின்போது மக்கள்பட்ட அவலத்திற்கு அளவிடையே கிடையாது. அந்த வலிகள் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் பேரலைகளாகப் பொங்கி குமுறிக்கொண்டேயிருந்தன.
எப்படியாவது திரும்பவும் தங்கள் ஊருக்குப்போகவேண்டும் என்ற வன்னிமாந்தர்களது ஏக்கமும் ஆவலும் திவாவிற்குள்ளும் இருந்தது. வன்னிப்போரின் இறுதி நாட்களில் எல்லோரிடமும் இருந்த நம்பிக்கை பனித்துளிபோல நெஞ்சைவிட்டு காயத்தொடங்கிவிட்டது.
17.05.2009 அன்று வன்னியில் கடைசிவரை இருந்து இடம்பெயர்ந்த பல இலட்சம் மக்களில் திவாவும் ஒருவனாக வவுனியாவின் புனர்வாழ்வு முகாம் ஒன்றில் தஞ்சமடைந்தான்.
அந்தமுகாமில் வசித்தவர்களில் அவனுக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இருக்கவில்லை. உறவுகள் யாருமற்ற தனிமை அவனை வாட்டியது. வன்னியில் காயமடைந்து நொந்துபோயிருந்த அவனுக்கு ஆறுதலளிக்க தாய்மடியைத் தேடியது மனம். ஆனால் அவனுக்கு எந்த உறவினரதும் தொடர்புகூடக் கிடைக்கவில்லை.
பட்டி மாடுகளைப்போல பல ஆயிரக்கணக்கான மக்களை ஒரே இடத்தில் அடைத்து வைத்திருந்தது அரசு. எங்கட ஊரில மாடுகளுக்குக்கூட அத்துப்படியான சுதந்திரம் இருந்தது என்று நினைக்க அவனுக்கு மனத்தில் எரிச்சலாய் எரிந்தது.
அந்த முகாமைச்சுற்றி பலமான முட்கம்பி வேலிகள். அதனை அண்மித்து இராணுவக் காவலரண்கள். எல்லாமே புதிய சூழலாக இருந்தமையால் அது மக்களை அச்சப்படவைத்துக்கொண்டிருந்தது. அவனும் படையினரின் ஒவ்வொரு பதிவு நடவடிக்கைகளின் போதும் புலனாய்வாளர்களாம் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்களின் வருகையின்போதும் அச்சமும் நிம்மதியின்மையுமாகத்தான் இருந்தான். ஏனெனில் போராளியாக இருந்து தடுப்பு முகாம்களுக்குப் போகாமல் முகாம்களில் இருந்தவர்களையும் போராளிகளாக இருந்திருக்கக்கூடும் என்று சந்தேகப்படுபவர்களையும் படையினர் அங்கிருந்து அழைத்துச்சென்றுகொண்டிருந்தார்கள். அப்படி அழைத்துச் செல்பவர்களில் பலர் போராளிகளுக்கான தடுப்பு முகாம்களில் விடப்பட்டார்கள். சிலர் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். சிலர் சிலரின் மனிதாபிமானச் செயற்பாடுகளால் (லஞ்சம் வாங்கியபின்) அவர்களது பெற்றோரிடம் சென்றும் சேர்ந்தார்கள். சிலர் காணாமலும் போய்விட்டார்கள்.
யுத்தத்தின் இறுதி நாட்களில் வன்னியில் சத்துள்ள உணவின்றித்தான் உயிர்வாழ்ந்தனர் மக்கள். பல உடைமைகளையும் உயிர்களையும் பறிகொடுத்திருந்தனர். அந்த அவலங்களையெல்லாம் நெஞ்சில் பெரும் தீப்பிழம்பாகச் சுமந்துகொண்டு எஞ்சிய உயிர்களுடன் மட்டும் வவுனியாவில் தஞ்சமடைந்திருந்தனர் அந்த மக்கள். பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பதைப்போல அந்தச் சனங்களுக்கு முகாமிலும் பல தொற்றுநோய்களும் தொற்றித் தொற்றித் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தன.
அவர்களால் என்னசெய்யமுடியும்? அந்த முகாமிலும் உரியமருத்துவ வசதி இருக்கவில்லை. அங்கிருந்தவர்கள் எவரும் மேலதிக சிகிச்சைக்காக வெளியில் சென்றுவரவும் அப்போது அனுமதிக்கப்படவில்லை. வன்னியில் நடந்த அந்தக் கொடூரப் போரிலே உயிர் தப்பியவர்கள் பலர் அந்த முகாமில் நோய்வாய்ப்பட்டும் இறந்தனர். அந்தக் கொடுமையான காட்சிகளை கண்ணூடாகக்கண்ட திவா வெதும்பிப் போனான்.
புதிதாகக் காடு வெட்டப்பட்டிருந்த கரடுமுரடான நிலத்தில் அந்த முகாம் அமைந்திருந்தது. காட்டு மரங்கள் ஒன்றுகூட இல்லாமல் வெட்டை வெளியாக்கப்பட்ட இடத்தில்தான் தறப்பாள் கொட்டில்கள் நிரம்பி வழிந்தன. கொழுத்தி எரிக்கும் வெய்யிலில் முழத்துக்கு முழம் தறப்பாள் கொட்டில்கள். இருப்பிடங்களிற்கு அருகாமையிலேயே மலசல கூடங்கள், குடிநீர்த்தாங்கிகள், சமையல்கூடங்கள். மொத்தத்தில் எல்லாமே அங்கு சுகாதாரத்திற்கு மாறாகவே அமைந்திருந்தன.
ஒரேயொரு தறப்பாள் கொட்டிலில் பத்துப்பேர் இருக்க வேண்டும். சிறிய குடும்பமாக இருந்தால் ஒரே கொட்டிலில் மூன்று நான்கு குடும்பங்களும் இருக்க வேண்டும்.
திவாவும் தெரிந்த ஒரு குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டான். அந்தக் குடும்பத்தில் அப்பா, அம்மா, அக்கா, அத்தான், அவர்களின் பிள்ளைகள் இருவர், தம்பி, இரண்டு இளம் பெண்கள் ஆகியோருடன் வயதான மூதாட்டி ஒருவரும் இருந்தார்.
திவாவிற்கு அது எப்போதுமே பழக்கப்படாத வாழ்க்கை. பெண் பிள்ளைகளுடன் அதுவும் முன்பின் அறிமுகமே இல்லாதவர்களுடன் ஒரே கொட்டிலில் இருப்பது பலவகையில் மனச்சங்கடமாகவே இருந்தது. அங்கு யாருக்கும் படுத்துறங்குவதற்கு தனியான மறைவிடம் எதுவும் இருக்கவில்லை. உடை மாற்றக்கூட மிகவும் சிரமப்படுவார்கள்.
திவா ஒரு தங்கையுடன் கூடப்பிறந்தவன்தான். எனினும் வீட்டில் இவ்வாறான சிக்கல் அவனுக்கு ஏற்பட்டதே இல்லை. அங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகக் கழிவதுபோல இருந்தது.
உறவினர்கள் வெளிநாடுகளில் இருப்பவர்களின் கைகளில் பணம் புழங்கியது. கூட்டுக்குடும்பங்களாக வன்னிமண்ணில் விவசாயம் செய்து சீரும் சிறப்புமாக வாழ்;ந்த பலர் மீளமுடியாமல் தவித்தார்கள்.
முகாமில் பலநூறு பேருக்கு ஒன்றாகச் சமைக்கும் உணவில் சுவையே இருக்கவில்லை. பசிக்காக மட்டுமே சாப்பிடவேண்டியதாய் இருந்தது. சமையல் செய்வது, அதைப் பங்கிடுவது எல்லாமே மக்களால்தான் செய்யப்பட்டது. அதனை படையினர் மேற்பார்வை செய்தார்கள். திவா இருந்த கொட்டிலில் இரண்டு குட்டிப்பையன்களும் இருந்தார்கள்.
'அம்மா எனக்கு சாப்பாடு வேணாம் எண்டால் வேணாம்தான்.'
'இது என்ன ஒவ்வொருநாளும் கடலை? எனக்கு இடியப்பம்தான் அவிச்சுத்தா'
'அம்;மா இண்டைக்கு குழல்பிட்டு அவி'
என்றெல்லாம் அந்த வாண்டுப்பையன்கள் முகாம் உணவை வெறுத்தொதுக்கினார்கள். அந்தத் தாயாரால் அப்போதைக்கு செய்துகொடுக்க முடியாத உணவுகளையே விரும்பிக் கேட்பார்கள். அப்போதெல்லாம் அந்தத் தாயாரின் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும். அந்தத் தாய் இவ்வாறான உணவுகளை தயாரிக்க எங்கேபோவாள்? அவற்றை செய்துகொடுப்பதற்குப் பணம் வேண்டுமே. வன்னியில் இறுதிநாள்வரை பொத்திப் பொத்தி வைத்திருந்து கொண்டுவந்த சொற்ப பணமும் செலவாகிவிட்டது. இவ்வாறுதான் பல்லாயிரங் குடும்பங்களின் வாழ்க்கையும் விரக்தியோடும் ஏக்கத்தோடும் விருப்பமின்றியும் கழிந்துபோய்க்கொண்டிருந்தன.
அந்தந்த நேரத்திற்கு உணவுத்தட்டுகளுடன் வரிசையில் கையேந்தி நிற்கவேண்டும். அங்கு வந்த புதிதில் இரண்டொருநாட்கள் அவனை நித்திரை வாட்டி வதைத்தது. அதை நித்திரை என்பதா முழு மயக்கம் என்பதா தெரியவில்லை. உரிய நேரத்திற்கு வரிசைக்குப் போகாததால் திவா சாப்பாடில்லாமலும் இருந்திருக்கிறான். அவ்வாறான சமயங்களில் அவன் அவமானத்தால் தலைகுனிந்து அழுவான். அடிமைபோல வாழ்வதைவிட வன்னியிலேயே செத்திருக்கலாம் என அவனது மனம் அங்கலாய்க்கும்.
திவா தனக்கு வயதுவந்த நாளிலிருந்தே எதற்காகவும் யாரையும் எதிர்பார்க்காதவன். கௌரவமாக உழைத்து, இருப்பதை வைத்து சமாளித்து, நாலுபேர் மதிக்க வாழவேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவன். இப்போது கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழியே வேப்பங்காயாய் மனசில் கசந்தது. படித்தென்ன பட்டம் பெற்றென்ன? பண்பிருந்தென்ன பணமிருந்துதான் என்ன? அடிமையாகவேதான் வாழ்கின்றோம் என்றெல்லாம் அவனது மனம் கசப்பாய்க் கசந்தது.
இதுகூட நான் எனது குடும்பம் என்று வாழ்ந்ததற்காக இறைவன் தந்த தண்டனைதான் என நினைத்து நொந்து கொண்டான்.
நாம் எல்லோருமே ஒன்றுசேர்ந்து உழைத்திருந்தால்...............? என்று அவனது மனச்சாட்சி அவனுடன் வாதாடும். உண்மை உறைக்கும். எனினும் காலங்கடந்த அந்த ஞானத்தால் பயனென்ன? திவா தன்னைப்போலவே முடிந்துவிட்ட செயல்களாலும் முடியாத நினைவுகளாலும் திண்டாடிக் கொண்டிருந்த பலரைப்போல தறப்பாள் கொட்டிலுக்குள் சோர்ந்துபோய்க் கிடந்தான். அவனுடைய உணர்வுகள்கூட அவனுக்குள் மனப்போராட்டத்தையும் இயலாமையையும்தான் கிளப்பிக்கொண்டிருந்தன. எந்தவேலையுமின்றி கிடந்தாலும்கூட அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. உறக்கம்கூட இரக்கமில்லாத கனவுகளால் கிழித்தெறிaப்பட்டன. -............இன்னும்வரும்

No comments:
Post a Comment